பாசிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:Wiki tamil 100|கிஷோர்]]|ஆகஸ்டு 07, 2017}}
'''பாசிசம்''' (''fascism'') என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். [[பெனிட்டோ முசோலினி|முசோலினி]]யின் [[இத்தாலி]], [[இட்லர்|இட்லரின்]] [[ஜெர்மனி]] பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என [[மார்க்சியம்|மார்க்சியவாதி]]கள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.
 
அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிசம் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலக மகா யுத்தத்தின்]] போது [[இத்தாலி]]யில் தோன்றியது.பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.<ref>the hindu tamil.com|23.03.2014</ref>
==பாசிஸ்டுகளின் நம்பிக்கை==
போர், சமுதாயம், அரசு மற்றும் தொழில்நுட்பத்தின் தன்மைக்கு பாரிய மாற்றங்களை கொண்டு வந்த ஒரு புரட்சியாக முதலாம் உலகப் போரை பாசிஸ்டுகள் கண்டார்கள். மொத்த யுத்தத்தின் வருகையையும், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வெகுஜன அணிதிரட்டலும் பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையிலான வேறுபாட்டை முறித்துக் கொண்டது. யுத்தத்தின் போது அனைத்து குடிமக்களையும் இராணுவத்துடன் தொடர்புபட்டிருந்த ஒரு "இராணுவ குடியுரிமை" எழுந்தது. மில்லியன் கணக்கான மக்கள் முன் வரிசையில் பணியாற்றுவதற்கும், பொருளாதார உற்பத்தி மற்றும் தளவாடங்களை அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பிரஜைகளின் வாழ்வில் தலையிட முன்னெப்போதும் இல்லாத அதிகாரம் கொண்டுவருவதற்கும் ஒரு சக்தி வாய்ந்த அரசின் எழுச்சிக்கு இட்டுச் சென்றது.
 
தாராளவாத ஜனநாயகம் முற்றுமுழுதாக இருக்காது என்று பாசிஸ்டுகள் நம்புகின்றனர், மற்றும் ஆயுத சண்டையில் ஒரு தேசத்தை உருவாக்கவும், பொருளாதார சிக்கல்களுக்கு திறம்பட பதிலளிப்பதற்காகவும், சமுதாயத்தை ஒரு சர்வாதிகாரமான ஒரு கட்சி அரசின் கீழ் முழுமையாக அணிதிரட்டுவதே சரி என்று அவர்கள் கருதுகின்றனர். அத்தகைய அரசு ஒரு வலுவான தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும்.ஒரு சர்வாதிகாரி மற்றும் ஆளும் பாசிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இராணுவ அரசாங்கம் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கும், ஒரு நிலையான மற்றும் ஒழுங்கான சமுதாயத்தை பராமரிப்பதற்கும் தேவை. வன்முறை தானாக இயற்கையில் எதிர்மறையானது என்று வலியுறுத்துவதை பாசிசம் நிராகரிக்கிறது. அரசியல் வன்முறை, போர் மற்றும் ஏகாதிபத்தியம் போன்ற கருத்துக்களைக் கொண்டு தேசிய மறுசீரமைப்பை அடைய முடியும் என்று பாசிசம் நம்புகிறது.
* பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.<ref>the hindu tamil.com|23.03.2014</ref>
==மேற்கோள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாசிசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது