குமுதினி படகுப் படுகொலைகள், 1985: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவாக்கம்
வரிசை 1:
[[Image:Delftjetty.jpg|thumb|300px|Right| குமுதினி படகு புறப்படும் [[நெடுந்தீவு|நெடுந்தீவின்]] [[மாவலித்துறை]]]]
'''குமுதினிப் படுகொலைகள்''' அல்லது '''குமுதினி படகுப் படுகொலைகள்''' என்பது [[மே 15]], [[1985]] ஆம் ஆண்டு [[மே 15]] ஆம் நாள் [[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய [[குமுதினி படகு|குமுதினிப் படகில்]] பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமைசெய்யப்பட்ட '''குமுதினிப் படுகொலைகள்'''நிகழ்வைக் எனப்படுகின்றதுகுறிக்கும். [[1985]]நெடுந்தீவின் [[மே 15மாவலித்துறை]]யில் ஆம் நாள் நெடுந்தீவின்இருந்து [[மாவலித்துறைநயினாதீவு|நயினாதீவின்]]யில் இருந்து புங்குடுதீவின் [[குறிகாட்டுவான்]] துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் [[இலங்கை]] கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
 
நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்<ref name=kt>[http://www.atimes.com/ind-pak/DC23Df05.html SRI LANKA: THE UNTOLD STORY Chapter 32: Limbo between war and peace] By K.T.Rajasingham</ref><ref>[http://www.uthr.org/Reports/Report10/chapter0.htm Chapter 10 Special Feature : Massacre in the Jaffna Lagoon] BY [[UTHR]]</ref>.
 
==நிகழ்வு ==
சாட்சியங்கள் [[பன்னாட்டு மன்னிப்பு அவை]]யினால் பதியப்பட்டன. குமுதினி [[1960கள்|1960களில்]] இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
குமுதினி படகு [[1985]] [[மே 15]] காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.
 
பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 [[அடி]] ஆழமானதாக அது இருந்தது.
 
இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர்.
 
நேரில் கண்டவர் கூறியதாவது:
{{cquote|"எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது."}}
 
கிட்டத்தட்ட 45 நிமிடங்களின் பின்னர் கன்ண்னாடி இழைப்படகு அங்கிருந்து புறப்பட்டது<ref name="AI">{{cite web |url= http://www.idcpublishers.com/ead/dsc.php?c01=all&faid=127ffaid.xml|title= Amnesty International Index: ASA 37/14/85|accessdate=2007-07-02 |format= |work=ICD Publishers}}</ref>
 
==இறந்தோர்==
இப்படுகொலையில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது<ref name="AI"/>.
 
==தாக்கங்கள்==
===பன்னாட்டு மன்னிப்பு அவை===
[[பன்னாட்டு மன்னிப்பு அவை]]யினார் ஈகழிவில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை [[இலங்கை]] அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்காஇ எடுக்கும் படி வற்புறுத்தியது<ref name="AI"/>.
 
===[[Image:Flag of Sri Lanka.svg|20px]] இலங்கை அரசாங்கம்===
இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் [[லலித் அத்துலத்முதலி]] கூறியதாவது<ref name=kt/>:
{{cquote|"இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,"}}
 
===[[Image:Flag of Tamil Eelam.png|20px]] விடுதலைப் புலிகள்===
[[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] சமாதானச் செயலகம் [[நவம்பர் 22]], [[2006]] விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது<ref>[http://www.ltteps.org/?view=1724&folder=25 Kumuthini Boat massacre]</ref>.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்ப்புகள்==
* [http://www.erimalai.info/2005/june/articles/story_of_kumuthini.htm குமுதினிப் படகின் கதை]
* [http://www.kumuthini.blogspot.com குமுதினி படுகொலை-சாட்சியங்கள்]
* [http://www.ltteps.org/?view=1724&folder=25 Kumuthini Boat massacre] - {{ஆ}}
 
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
"https://ta.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985" இலிருந்து மீள்விக்கப்பட்டது