தொடக்க நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 35:
ஆதாமின் பல தலைமுறைகள் வளர்ந்த பிறகு உலகில் பாவங்கள் அதிகரித்தன. இதனால் கடவுள் மனித இனத்தை அழிக்க முடிவு செய்தார். முதலில் அவர் தனக்கு ஏற்ற விதத்தில் நடந்து கொண்ட நோவா மற்றும் அவன் குடும்பத்திடம் ஒரு பெரிய கப்பல் செய்து அதில் அவர்களும் மற்ற உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கும்படி கூறுகிறார். பிறகு கடவுள் மிகப்பெரிய வெள்ளத்தை வரச்செய்தார். அது உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. பிறகு வெள்ளம் வடிந்தபிறகு இனி எப்போதும் இவ்வாறு வெள்ளம் வரச்செய்ய மாட்டேன் என்று கடவுள் உடன்படிக்கை செய்தார். அதற்கு அடையாளமாக வானவில்லைத் தோற்றுவித்தார். பிறகு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாபேல் கோபுரத்தை எழுப்ப முயற்சித்த போது அவர்களுக்கு இடையில் மொழிக்குழப்பத்தை உருவாக்கி அவர்களைப் பிரித்தார்.
தன் தாய்நாடான மெசொப்பொத்தாமியாவை விட்டுவிட்டு கானான் தேசத்திற்குப் பயணம் செய்யும்படி கடவுள் ஆபிராமிடம் அறிவுறுத்துகிறார். அவர் ஆபிராமுடைய சந்ததியினர் நட்சத்திரங்களைப் போல பெருகுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் மக்கள் அந்நிய தேசத்தில் அடக்குமுறையை அனுபவிப்பார்கள் என்றும் அதன் பின் அவர்கள் "எகிப்து நதியிலிருந்து ஐப்பிராத்து நதிவரை" உள்ள நிலத்தைப் பெறுவார்கள் என்றும் கூறுகிறார். ஆபிராமின் பெயர் ஆபிரகாம் என்றும் அவருடைய மனைவி பெயர் சாராயி சாராள் என்றும் மாறியது. பிறகு உடன்படிக்கையின் அடையாளமாக ஆபிராம் உட்பட எல்லா ஆண்மக்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. சாராளுக்கு வயதாகியும் குழந்தை பிறக்காததால் அவள் ஆபிரகாமிடம், எகிப்திய அடிமைப்பெண் ஆகாரை இரண்டாவது மனைவியாக எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறார். ஆகார் மூலம், ஆபிரகாம் இஸ்மயேலுக்குத் தந்தையானார்.
சோதோம் மற்றும் கொமோரா நகர மக்கள் பாவங்கள் செய்ததால் அந்நகரங்களை கடவுள் அழித்துவிட முடிவெடுக்கிறார். இதைத்தடுக்க ஆபிரகாம் கடவுளிடம் தாங்கள் 10 நீதியுள்ள மனிதர்களைக் கண்டால் அவர்களின்பொருட்டு நகரங்களை அழிக்க வேண்டாம் என்று வேண்டுகிறார். ஆபிரகாமின் மருமகன் லோத்து மற்றும் அவரது குடும்பத்தாரை தேவதூதர்கள் காப்பாற்றுகிறார்கள், ஆனால் அவனுடைய மனைவி கட்டளையை மீறி திரும்பிப் பார்த்ததால் உப்பு தூணாக மாறிவிடுகிறாள். லோத்துவின் மகள்களுக்கு கணவர்கள் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் தந்தையுடன் உறவாடி மோவாபியர் மற்றும் அம்மோனியர் ஆகிய குலங்களின் மூதாதையரைப் பெற்றெடுக்கிறார்கள்.
ஆபிரகாமும் சாராவும் கெராரில் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு சகோதரரும் சகோதரியும் போல நடந்துகொள்கிறார்கள். கெராரின் அரசன் சாராவைத் தன் மனைவியாக்கிக் கொண்டான். பிறகு கடவுள் அவளைத் திரும்ப ஆபிரகாமிடம் ஒப்படைத்துவிடும்படி எச்சரித்ததால் அவன் கீழ்ப்படிகிறான். கடவுள் தன் உடன்படிக்கையை நிலைநாட்டும் பொருட்டு ஆபிரகாம் மற்றும் சாறாளுக்கு ஈசாக்கு என்ற மகனை அளிக்கிறார். பிறகு சாராவின் வலியுறுத்தலால் இஸ்மவேல் மற்றும் அவரது தாய் ஆகார் ஆகியோர் விரட்டப்பட்டனர். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றி இஸ்மவேலின் சந்நதி ஒரு பெரிய தேசமாக உருவாகும் என்று வாக்குறுதியளித்தார்.
கடவுள் ஈசாக்கை பலியிடும்படி கோரியதன் மூலம் ஆபிரகாமை சோதித்துப் பார்க்கிறார். ஆபிரகாம் தனது மகனைப் பிடித்து கத்தி போட போகிற வேளையில், கடவுள் அவரை கட்டுப்படுத்துகிறார். மேலும் எண்ணற்ற சந்ததியாரை அவருக்கு வாக்குறுதியளித்தார். சாரா இறந்தபோது, ஆபிரகாம் மக்பேலா (தற்போதைய ஹெப்ரோன் என நம்பப்படுகிறது) என்னும் ஒரு குடும்ப கல்லறையை வாங்குகிறார். பிறகு அவர் மெசொப்பொத்தேமியாவுக்கு தன்னுடைய ஊழியரை அனுப்ப அவர் குடும்ப உறவுகளில் ஈசாக்கிற்கு ஏற்ற மனைவியாக ரெபெக்காவைத் தேர்ந்தெடுக்கிறார். ஆபிரகாமுக்கு மற்றொரு மனைவியான கேத்தூராவால் மீதியானியர்கள் பிறந்தனர். ஆபிரகாம் ஒரு வளமான வயதில் இறந்த பிறகு ஹெப்ரோன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஈசாக்குடைய மனைவியான ரெபேக்கா எசாயூ மற்றும் யாக்கோபைப் பெற்றாள்; மோசடி மூலம், யாக்கோபு ஏசாவுக்குப் பதிலாக வந்து அவருடைய தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார். பிறகு அவர் தனது மாமாவின் ஊருக்குச் சென்று அங்கு ராகேல் மற்றும் லேயாள் என்ற இரண்டு மனைவிகளையும் சம்பாதிக்கிறார். யாக்கோபின் பெயர் இஸ்ரவேலுக்கு மாறியது; அவனுடைய மனைவிகளும் அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும் பன்னிரண்டு புத்திரரும் ஒரு மகள் தீனாவும் இருந்தனர்.
யாக்கோபின் விருப்பமான மகன் யோசேப்பு எகிப்தில் தன்னுடைய பொறாமைக்கார சகோதரர்களால் அடிமைகளாக விற்கப்பட்டார். பாரவோன் மனைவியின் சூழ்ச்சியால் யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் யோசேப்பு எகிப்தில் வரவிருக்கும் கடும் பஞ்சத்தைத் தன் கனவில் கண்டு முன்கூட்டியே அறிவிக்கிறார். பிறகு அவன் விடுதலை செய்யப்பட்டு அவனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டது. அவனது சகோதரர்கள் உணவுக்காக அவரிடம் கையேந்தி நின்றனர். பிறகு யோசேப்பு தன் குடும்பத்தினருடன் சேர்ந்தான். யாக்கோபு நோய்வாய்ப்பட்ட போது தன் பிள்ளைகளை ஆசீர்வதித்துவிட்டு இறந்துவிடுகிறார். பிறகு பல ஆண்டுகள் வளமான வாழ்வு வாழ்ந்து யோசேப்பும் தன் மூச்சை நிறுத்துகிறார்.
== உள்ளடக்கம் ==
|