தொடக்க நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 89:
# இசுரயேல் மக்கள் எகிப்தில் குடியேறுதல் (தொநூ 46:1 - 50:26)
 
தொடக்க நூலின் இந்த இரண்டாம் பகுதி இசுரயேல் மக்கள் எவ்வாறு ஒரு பெரும் குலமாக உருவானார்கள் என்பதை வரலாறும் புனைவும் கலந்து எடுத்துரைக்கிறது. ஆபிராம் என்றொரு மனிதர் நடு ஆசியாவில் வாழ்ந்துவந்தார் (அன்றைய மெசபொத்தாமியா, இன்றைய ஈராக் பகுதி). கடவுள் ஆபிரகாமைத் தம் சொந்த ஊராகிய "ஊர்" என்னும் இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார். ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றி, அவரோடு ஓர் [[உடன்படிக்கை (விவிலியம்)|உடன்படிக்கை]] செய்துகொள்கிறார். ஆபிரகாம் ஒரு பெரிய இனத்திற்குத் தந்தை ஆவார் என்றும், பெரும் செல்வங்கள் பெறுவார் என்றும் கடவுள் வாக்களிக்கின்றார். ஆனால் ஆபிரகாமுக்குக் குழந்தைகள் இல்லை. பின், அவர் தமது துணை மனைவியின் மூலம் இசுமாயேல் என்னும் சிறுவனுக்குத் தந்தையாகின்றார்.
 
கடவுள் கருணையால் ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்றொரு மகன் பிறக்கிறார். அந்த மகனைத் தமக்குப் பலியாக்கக் கேட்கின்றார் கடவுள். ஆபிரகாமும் தயக்கமின்றி கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார். ஈசாக்கு பலியிடப்படுவதற்கு முன் கடவுள் அவரைக் காப்பாற்றி அவர் வழியாக இன்னொரு தலைமுறை தோன்றச் செய்கிறார். ஈசாக்கின் இரு பிள்ளைகளாகிய ஏசாவும் யாக்கோபும் ஒருவர் ஒருவருக்குப் போட்டியாக மாறுகிறார்கள். அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். மூத்தவனாகிய ஏசாவை விட இளையவனாகிய யாக்கோபே கடவுளுக்கு உகந்தவனாகிறான்.
 
யாக்கோபுக்குக் கடவுள் ''இசுரயேல்'' என்றொரு பெயரை அளிக்கிறார். இதுவே பிற்காலத்தில் ஒரு பெரும் இனத்தைச் சார்ந்த மக்களின் பெயராக மாறிற்று. யாக்கோபு என்னும் பெயர் "யூதா" என்றும் வரும். அச்சொல்லிலிருந்து "யூதர்" என்னும் சொல் பிறந்தது. அதுவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயராயிற்று. பிற்காலத்தில் இம்மக்கள் குடியிருந்த பாலத்தீனத்தின் வடக்குப் பகுதி "இசுரயேல்" என்றும், தெற்குப் பகுதி "யூதா" என்றும் பெயர் பெற்றன.
 
யாக்கோபுக்குப் பிறந்த பன்னிருவரும் இசுரயேல் மக்களின் பன்னிரு குலங்களுக்குத் தந்தையர் ஆயினர். இவர்களுள் இளையவரான யோசேப்பு என்பவரின் கதை தொடக்க நூலின் இறுதி அதிகாரங்களில் உள்ளது (அதிகாரங்கள் 37 முதல் 50 முடிய).
 
== கிறித்தவர்கள் தொடக்க நூலைப் புரிந்துகொள்ளும் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/தொடக்க_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது