நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
==மண், தட்பவெப்பம்==
==விதைத்தல், நடுதல்==
 
நீராதாரத்தைப் பொருத்து நெல் 'உலர்நில முறை' அல்லது 'நீர்நில முறை' ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக்கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன. நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் பின்னர் விளை நிலத்தில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை.
 
நெற்பயிர் நீர் தேங்கிய பாத்திகளில் வளர்க்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில், சுமார் 15 செ.மீ நீர் தேக்கப்படுவதால், சில நாடுகளில் நெல்லுடன் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. நெற்பாத்திகள் நீர் தேக்கி வளர்க்கப்படுவதால், இயற்கையாகவே களைசெடிகள் குறைவாக இருக்கும்.
 
நாற்றங்காலில் 3 - 4 வாரங்கள் வளர்ந்தபின் நாற்றுகள் பறிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. இவை பின் சுமார் 5 செ.மீ நீர் தேங்கிய நடவு வயலில் நடப்படுகின்றன. நாற்றுக்கள் குறுவையில் 15 X 10 செ.மீ இடைவெளியும், தாளடியில் 20 X 10 செ.மீ இடைவெளியும் விட்டு நடப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீர் அளவு குறைந்து நிலம் தெரியும்போதும், நீர் பாய்ச்சி 5 செ. மீ நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேவையான தழைச்சத்து பிரித்து உரமாக இடப்படுகிறது. நட்ட ஐந்தாம் நாள் களைக்கொல்லி உபயோகித்தோ அல்லது 15 ஆம் நாள் கையாலோ களைகள் நீக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது