இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இந்தி using HotCat
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தமிழ்த் தேசிய அரசியல்}}
{{திராவிடக் கட்சிகள்}}
'''இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்''' (''Anti-Hindi imposition agitations'') என்பது [[இந்தி]] மொழியை, [[இந்தியா]]வின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் [[இந்தி மொழி]] பேசாத மாநிலங்களின் [[கல்வி]]ப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் [[இந்தியா|இந்திய அரசின்]] முயற்சிக்கு எதிராகத் [[தமிழ்நாடு|தமிழக]] மக்களால், பெரும்பாலும் [[சனநாயகம்|சனநாயக, அற]] வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
 
[[1937]]ஆம் ஆண்டு முதல் முறையாக [[இந்தி]]த் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] முதல்முறையாக வெற்றிபெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக்]] கட்சியின் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி]] தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய [[நீதிக்கட்சி]]யும் [[ஈ. வெ. ராமசாமி|பெரியார் ஈ. வெ. இராமசாமி]]யும் மூன்று ஆண்டுகள் [[உண்ணாநோன்பு]], மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; [[பெண்]]கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு [[1939]]ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' [[பிப்ரவரி]] [[1940]]ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.