அப்பாசியக் கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
 
'''அப்பாசியக் கலீபகம்''' [[இசுலாமியப் பேரரசு|இசுலாமியப் பேரரசின்]] [[கலீபகம்|கலீபகங்களில்]] மூன்றாவது கலீபகம் ஆகும். இது, [[அப்பாசிய வம்சம்|அப்பாசிய வம்சத்தைச்]] சேர்ந்த கலீபாக்களால் ஆளப்பட்டது. [[பக்தாத்]]தில் தமது [[தலைநகரம்|தலைநகரத்தை]] நிறுவியிருந்த அப்பாசிய வம்சத்தினர், அல் அந்தலூசு தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து [[உமய்யா கலீபகம்|உமய்யா கலீபாக்களை]] நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.
 
இவ்வம்சம் முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான [[அப்பாசு இபின் அப்துல் முத்தலிப்]] என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கிபி 750ல், [[ஹர்ரான்]] என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் கிபி 762ல் பாக்தாத் தலைநகரம் ஆக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகள் சிறப்புடன் திகழ்ந்த இவ்வம்சத்தின் ஆட்சி, இவர்கள் உருவாக்கிய படைப்பிரிவான [[மம்லூக்கு]]களின்மம்லூக்குகளின் எழுச்சியுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. [[பாரசீகம்|பாரசீகப்]] பகுதி முழுதும் ஆட்சியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமது அதிகாரத்தை உள்ளூர் [[அமீர்]]களுக்குக் கையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வமீர்கள், அப்பாசியர்களின் மேலாண்மையைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அல் அந்தலூசுக்குத் தப்பிச் சென்ற உமய்யா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடமும், [[மக்ரிப்]], [[இஃப்ரீக்கியா]] போன்றவற்றை சுதந்திரமான [[அக்லாபியர்]], [[பாத்திமியர்]] போன்றோரிடமும் இழந்தனர்.கு
 
ன்றோரிடமும் இழந்தனர்.
 
மொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் [[எகிப்து|எகிப்தில்]] உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரசிடம்]] கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/அப்பாசியக்_கலீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது