சர்தார் சரோவர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
(edited with ProveIt)
வரிசை 74:
'''சர்தார் சரோவர் அணை'''(Sardar Sarovar Dam) [[நர்மதை ஆறு|நர்மதை ஆற்றின்]] மீது கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை [[குஜராத்]] மாநிலத்தின் 'நவகம்' என்ற இடத்தின் அருகில் உள்ளது. இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ (535 அடி) ஆகும்.<ref>{{cite web|title=Sardar Sarovar Power Complex|url=http://www.nca.gov.in/power_index.htm|publisher=Narmada Control Authority|accessdate=20 January 2012}}</ref> நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணைதான் (SSD) மிகப்பெரியது ஆகும்.<ref>http://www.narmada.org/sardarsarovar.html</ref> நீர் அழுத்த பொறியியல் திட்டத்தின் கீழ் இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1979 இல் வடிவம் பெற்று 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
 
இந்த அணை உலகின் பெரிய அணையான அமெரிக்காவின் கிரான்ட் அணைக்கு அடுத்து இரண்டாவது பெரிய அணை என்ற பெயரைப் பெற்றுள்ளது. மேலும் இது இந்தியாவின் மிகப்பெரிய இந்த அணையாகும். இந்த அணையானது 88 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இது மத்தியபிரதேசம், குஜராத் தாநிலங்களில் சுமார் 214 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளது. அணையின் அதிகபட்ச அகலம் 16.10 கி.மீ. குறைந்தபட்ச அகலம் 1.77 மீட்டர் கொண்டதாகும். கடந்த 1961 அடிக்கல் நாட்டப்பட்ட அணைத் திட்டம் சுமார் ரூ. 40,000 கோடி செலவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு 2017 ஆண்டு தற்போது முழுமை அடைந்தது.
 
அணையின் மூலம் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் 18 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 150-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும், 9000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், எல்லையில் பணியாற்றும் பி.எஸ்.எப். வீரர்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
 
சர்தார் சரோவர் அணையின் நதிப் படுகையில் 1200 மெகாவாட் மின் நிலையமும், கால்வாய் பகுதியில் 250 மெகாவாட் மின் நிலையமும் அமைந்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 57 சதவீதம் மகாராஷ்டிராவுக்கும் 27 சதவீதம் மத்திய பிரதேசத்துக்கும் 16 சதவீதம் குஜராத்துக்கும் விநியோகிக்கப்படுகிறது.
== வரலாறு ==
1961 ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் சவகர்லால் நேரு, நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்ட அனுமதி அளித்தார். 1979 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1987 இல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு உதவ முன்வந்த உலக வங்கி திடீரென நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது. இதனிடையே அணை திட்டத்தால் மத்திய பிரதேச, குஜராத் விவசாயிகள், பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நர்மதா பச்சாவோ அந்தோலன் (நர்மதை ஆறு பாதுகாப்பு அமைப்பு) இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 1996 இல் அணை கட்டுமானப் பணிக்கு தடை விதித்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு அக்டோபரில் சில கட்டுப்பாடுகளை விதித்து தடை உத்தரவை நீக்கியது.
 
இதப்பிறகு 2006 ஆம் ஆண்டில் அணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அணையின் உயரம் 121.92 மீட்டராக இருந்தது. பின்னர் அந்த அணையின் உயரத்தை 138.68 மீட்டராக உயர்த்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2017 செப்டம்பர் 17 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/article19707189.ece | title=நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி: பொறியியல் தொழில்நுட்ப அதிசயம் என பாராட்டு | publisher=தி இந்து | work=செய்தி | date=2017 செப்டம்பர் 18 | accessdate=18 செப்டம்பர் 2017}}</ref>
==மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சர்தார்_சரோவர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது