பவானிசாகர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
== டணாய்க்கன்_கோட்டை ==
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான் இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. [[தண்டநாயக்கன் கோட்டை|டணாய்க்கன்_கோட்டை]] என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது. 1948-55ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது இந்த பவானிசாகர் அணை. இந்த அணை கட்டப்படுவதற்கு முன்னால் அங்கு வடவள்ளி, பீர்க்கடவு, குய்யனூர், பட்டரமங்கலம், ராஜன் நகர் ஆகிய ஆறு கிராமங்கள் கூடுவாய் என்னும் வருவாய் கிராம்த்திற்குட்பட்டிருந்தன. இந்த ஆறுகிராம மக்களின் தியாகத்தால் உருவானதுதான் இந்த அணை.
 
ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் க்ம்பீரமாய் நிற்கும் இந்தக்கோட்டையைப் பார்க்கும்போது அன்றையக் கட்டிடக்கலையின் நுட்பம் விளங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பவானிசாகர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது