குஷ்பு சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குஷ்புவின் பாடசாலை காலத்தில் அவரது மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது ரவி சாஸ்திரி மட்டுமே
காப்புரிமை மீறல்
வரிசை 17:
 
'''குசுப்பூ''' (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்பட]] நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு [[வருஷம் 16]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். [[கன்னடம்]], [[மலையாளம்]] போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் [[சுந்தர் சி.]]-ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
 
 
==தனிப்பட்ட குணங்களும் ,குறிப்புகளும் ==
( திருமதி ஆனந்திராம்குமார், தொகுப்பாளர் )
 
குஷ்புவின் ஒரிஜினல் பெயர் நக்கத்கான். சினிமாவில் `நக்கத்’ என்று உரிமையோடு அழைக்கும் ஒரே ஒருவர் ..... கமல்,
சுந்தருக்கு குட்டிம்மா... வைஃபி, நண்பர்களுக்கு.... குஷ்!
 
நடித்ததில் பிடித்த படங்கள் `சின்னத்தம்பி’, ஜாதி மல்லி’, `வருஷம் 16’,
கணவர் சுந்தர்.சி இயக்கத்தில் பிடித்தவை `உள்ளத்தை அள்ளித்தா’, `அன்பே சிவம்’,
அவர் நடித்ததில் பிடித்த படம் `தலைநகரம்’!
 
எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பார் .வீட்டில் எந்த வேலையும் இல்லாவிட்டாலும் கூட அடுக்கிவைத்திருக்கும் பொருட்களைக் கலைத்துப்போட்டு மீண்டும் அடுக்கும் அளவுக்கு . `ஏதாவது லேப்ல கொண்டுபோய்தான் உன்னைச் சோதனை பண்ணணும்’ என்று சுந்தர் கிண்டலடிக்கும் அளவுக்கு சுறுசுறுப்பு
 
தமிழில் கார்த்திக், அர்விந்தசாமி,- பாலிவுட்டில் அமிதாப், அமீர் கான் பிடித்த ஹீரோக்கள்.
பாலிவுட் கோவிந்தா இவருடைய சிறந்த நண்பர்!
 
மழலைப் பேச்சு, கிறுக்கல் கையெழுத்து, பிறந்த நாள் உடைகள், வீசியெறிந்த சாக்லேட் பேப்பர்கள், புகைப்படங்கள் என்று தன் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பொக்கிஷமாகச் சேர்த்துவைத்திருக்கிறார்!
 
முறை மாமன்’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்துகொண்டு இருந்த சமயம் `பம்பாய்’ படம் பார்க்கப் போனார்கள். குஷ்பு வந்த விஷயம் தெரிந்து தியேட்டருக்கு வெளியே தள்ளுமுள்ளு. ரசிகர்களிடம் இருந்து கிட்டத்தட்ட குஷ்புவை மீட்டு, கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு காருக்கு ஓடி வந்தபோதுதான் சுந்தரின் மீது காதல் பூத்ததாம்!
 
வழக்கமாக நடிகைகள் வயதைச் சொல்லத் தயங்குவார்கள் பிறந்த நாள் கேட்டால், தேதியும் மாதமும் மட்டும் சொல்வார்கள்.
ஆனால், `பிறந்த நாள்- 29.09.1970 எனக்கு இத்தனை வயதாகிறது!’ என்பார் குஷ்பு!
 
நட்புக்காக எதையும் விட்டுக்கொடுப்பார். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ஆடை வடிவமைப்பாளர் அனு, மதுபாலா (`ரோஜா’ ஹீரோயின்), சுப்பு (பஞ்சு அருணாசலத்தில் மகன்), சுஜாதா விஜயகுமார் (`ஜெயம்’ ரவியின் மாமியார்) ஆகிய ஐவர்தான் குஷ்புவின் மிக நெருங்கிய நண்பர்கள்!
 
ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் ஸ்பெஷல், மற்ற வார நாட்களில் வீட்டில் இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். மகள்கள் படிக்கும் லேடி ஆண்டாள் பள்ளியில் பெற்றோர்கள் சங்க நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுப்பார். `குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமாகச் செல்லம் கொடுப்பார் .அத்தனை அன்பு .
 
தமிழ், தெலுங்கு, இந்தி,உருது, மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என குஷ்புக்கு ஒன்பது மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும்
 
தமிழில் சத்யராஜீடன் `நடிகன்’ தொடங்கி `பெரியார்’ வரை 13 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார். பிரபுவுடன் 10 படங்களில் ஜோடி. பி.வாசுவின் இயக்கத்தில் ஒன்பது படங்கள்!
 
கமல்தான் தனக்குச் சிறந்த ஜோடி என்பார். `மைக்கேல் மதன காமராஜன்’ முதல் நாள் படப்பிடிப்புக்கு முழு மேக்கப்பில் வந்த இவரைப் பார்த்து அதிர்ச்சியான கமல்.
 
வளர்ப்புப் பிராணிகளில் நாய் என்றால் செல்லம். மும்பையில் 14 ஆண்டுகள் வளர்த்த `சாம்பியன்’ என்ற நாயின் நினைவாக அதே பெயரிட்ட ஒன்று உட்பட, `மென்டோ’ ,` பிளஃபி’ என மூன்று ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களும் `சில்லி என்ற `பக்’வகை நாய் ஒன்றும் வளர்ந்து வருகிறார்!
 
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதற்கான தீர்வு நிச்சயம் இருக்கும் என்று நினைப்பது தனது நல்ல பழக்கம் என்பவர், காச்மூச் என்று கத்திக் குவிக்கும் முன்கோபம் மட்டுமே கெட்ட பழக்கம் என்பார்
 
மூர்த்தி’ என்று இயற்பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பார்த்திபன் நல்ல நண்பர்.
இருவரும் `வாடா... போடா...’ என்று தான் பேசிக்கொள்வார்கள்.
 
தர்மத்தின் தலைவன்’ தொடங்கி இன்று வரை ரஜினியும் குஷ்புவும் சந்தித்தால் மராத்தியில்தான் பேசிக்கொள்வார்கள்.
 
அஞ்சலிதேவி, சாவித்ரி, சரோஜாதேவி, ராதிகா, ரேவதி, ஊர்வசி ஆகிய ஆறு நடிகைகளும் இவருக்குப் பிடித்தவர்கள்.
 
குஷ்புவிக்கு திருச்சிக்கு அருகிலுள்ள கிராமத்தில் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியது செய்தி. ஆனால், இன்று வரை அந்த ரசிகர் யார் என்றும் தெரியாது, அந்த கோயிலையும் நான் பார்த்ததில்லை என்பார் குஷ்பு!
 
கிளிசரின் போட்டாலும் சில நடிகைகளுக்கு அழுகை வராது. ஆனால், குஷ்பு கிளிசரின் போடாமலேயே இயல்பாக அழுவார். `இந்த டயலாக்குக்கும் அந்த டயலாக்குக்கும் இடையில் உங்க கண்ணுல இருந்து டிராப்ஸ் விழணும்’ என்றாலும் பக்காவாக நடித்துக் கொடுப்பார்
 
கற்பு பற்றி அளித்த பேட்டிக்குப் பிறகு இவர் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 43 வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். ``என் உச்சபட்ச போராட்டக் குணத்தை நானே உணர்ந்து இந்த வழக்கு விசாரணை சமயத்தில்தான்!’’ என்பார்.
 
== ரவி சாஸ்திரி==
 
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமாகக் கூட குஷ்பூ சுந்தரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, இந்தி, மராத்தி என அத்தனை மொழிப்படங்களிலும் நடித்திருப்பதோடு தற்போது அரசியல்ரீதியாகவும் அகில இந்திய காங்கிரஸின் பிரபலமான அடையாளங்களில் ஒருவராக இருப்பதால் குஷ்பூவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம்.
இப்படி தன்னைச் சுற்றியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்டவரான குஷ்பு யாருடைய பரம ரசிகர் தெரியுமா? அதை, தான் நடிக்க வந்தது முதல் இன்று வரை தனது பல நேர்காணல்களிலும் குஷ்பூவே பெருமை பொங்கப் பலமுறை கூறியிருக்கிறார்.தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தான். குஷ்புவின் பாடசாலை காலத்தில் அவரது மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது ரவி சாஸ்திரி மட்டுமே
 
 
"https://ta.wikipedia.org/wiki/குஷ்பு_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது