இந்த அரண்மனையானது நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, இரகுநாத நாயக்கரால் தொடப்பட்டுதொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது என்பது பொதுவான கருத்து. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது.<ref>{{cite journal | title=கட்டிடக் களஞ்சியம் | author=அருள்செல்வன் | journal=தி இந்து, சொந்தவீடு இணைப்பு | year=2017 | month=செப்டம்பர் 30}}</ref> சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.