அமரகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1:
'''அமரகோசம்'''
இதற்கு ''நாமலிங்கானுசாசனம்'' என்ற பெயரும் உண்டு. இது அமரசிம்மன் என்கிற [[பௌத்தம்|பௌத்த]] மன்னனால் [[4ம் நூற்றாண்டு|கி.பி. நான்காம் நூற்றாண்டில்]] சமஸ்கிருதத்தில், ஒரு வார்த்தைக்கு ஈடான மற்ற வார்த்தைகளையும் தரும் நூல் இது.
ஆங்கிலத்தில் தெசாரஸ் (Thesaurus) உருவாக்கிய பி.எம்.ரோகெக் (P.M. Roget) அமரகோசத்தைக் குறிப்பிடுவதால், இந்த நூல் ஆங்கில தெசாரஸ் உருவாக ஒரு தாக்கமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது. <ref>http://ir.nul.nagoya-u.ac.jp/jspui/bitstream/2237/19194/1/5_SAMBHASA-16.pdf</ref>
==நூலின் அமைப்பு==
அமரகோசம் என்ற இந்நூலானது, [[வடமொழி]]யில் 'அனுஷ்டுப்' [[சந்தம் (ஒலி)|சந்தத்தில்]] இயற்றப் பட்டுள்ளது. மொத்தம் 1608 ஸ்லோக வரிகள் உள்ளன. அவ்வரிகள் மொத்தமாக, 11580 சொற்களால் உருவாக்கப் பட்டுள்ளன. இந்நூலின், ஒரு சொல்லை எடுத்தால் அதற்கு ஈடான வேறு பல சொற்களையும் (synonyms – பர்யாய சப்தம்), ஒரு சொல்லுக்குரிய பல்வேறு பொருட்களையும் (நாநார்த்த சப்தம்) தருவது, இதன் சிறப்பாக கருதப்படுகிறது. இவற்றில் திரும்ப திரும்ப இடம்பெற்ற சொற்களைத் தவிர்த்தாலும், மொத்தம் 9031 சொற்கள் உள்ளன. இந்நூல் மூன்று பிரிவுகளாகப் ([[காண்டம்|காண்டங்கள்]]) பிரிக்கப்பட்டுள்ளன.
#பிரதம காண்டம் – 2465 சொற்கள்
#துவிதிய காண்டம் – 5827 சொற்கள்
வரி 40 ⟶ 43:
==இதன் தழுவல்களும், மொழிபெயர்ப்புகளும்==
பொருள் செறிவு நெரிந்த இந்நூலுக்கு, பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு அறிஞர்கள், விளக்க உரைகள் எழுதி உள்ளனர். அமரகோசத்திற்கு கிட்டத்தட்ட அறுபது [[உரைநூல்|உரை]]கள் எழுதப்பட்டுள்ளன. இது தவிர [[சீனம்]], [[பிரெஞ்சு]], [[ஆங்கிலம்]], [[ஜெர்மன்]] ஆகிய பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டு உரைகள் எழுதப்பட்டுள்ளன.[[கி.பி.]] [[1700]] ஆம் ஆண்டு காலத்தில் [[ஈசுவர பாரதி]] என்பவரால் அமரகோசம் தமிழில் “பல்பொருட் சூடாமணி” என்னும் பெயரில் தமிழ் விருத்தப் பாக்களாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழறிஞர் [[மு. சண்முகம் பிள்ளை]] அவர்களின், “நிகண்டு சொற்பொருட்கோவை” என்னும் நூலின் மூலம் தெரியவருகிறது. இது தவிர லிங்கய்ய சூரியின், ''லிங்க பட்டீயம்'' என்கிற அமரகோச உரையைத் தழுவி, திருவேங்கடாசாரி கி.பி. [[1915]] வருடத்தில், [[கிரந்தம்|கிரந்த]] எழுத்தில் [[சமசுகிருதம்|சமஸ்க்ருதமும்]], [[தமிழ்|தமிழும்]] கலந்து ஒரு நூலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த [[2006]] ஆண்டு, [[தஞ்சை சரசுவதிமகால் நூலகம்]], இந்த அமரகோசத்தை எளிய தமிழில், பொருளுடன் பதிப்பித்து உள்ளது.
==மேற்கோள்கள்==
<references/>
==உயவுத்துணை==
|