சௌமியமூர்த்தி தொண்டமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற... |
|||
வரிசை 66:
சௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா, சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார். அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். [[1924]] ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் [[கம்பளை]] புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார்.
1927இல், கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில், [[மகாத்மா காந்தி]] இலங்கை வந்திருந்தார். அவரின் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது [[கண்டி]] உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது.
=== திருமணமும் குடும்பமும் ===
அச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இதன்படி [[1932]] ஆம் ஆண்டு, இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது. அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார்.
1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். [[1940]] இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகாண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்.
=== அரசியல் பிரவேசம் ===
வரிசை 104:
=== போட்டியிட்ட தேர்தல்கள் ===
[[டிசம்பர் 23]], 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை. அம்முறை [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] ஆட்சி அமைத்தார். [[ஆகஸ்டு 4]], [[1960]] இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார். [[மார்ச் 22]],1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டார்.
{| class="wikitable"
வரிசை 132:
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையகத்
[[பகுப்பு:இலங்கை தொழிற்சங்கவாதிகள்]]
[[பகுப்பு:1913 பிறப்புகள்]]
|