'''ரணசிங்க பிரேமதாசா''' ([[ஜூன் 23]], [[1924]] - [[மே 1]], [[1993]]) [[இலங்கை]]யின் முன்னாள் அதிபராவர் (இலங்கைத் தமிழ்தமிழில்: சனாதிபதியாவார்). இவர் அதிபராவதற்கு முன்னர் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜே.ஆர்.]] தலைமையிலான அரசில் [[பெப்ரவரி 6]] [[1978]] தொடக்கம் [[மார்ச் 3]] [[1989]] வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் பலர் இரகசியமான முறையில் கடத்தப்பட்டு பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலபகுதிகளில் மணிக்கூட்டுகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு இவர் ஆருடத்தில் ([[சோதிடம்]]) நம்பிக்கையுள்ள இவரின் சோதிடம் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இவர் [[1993]] இல் [[மே தினம்|மே தின]] ஊர்வலத்தின் போது, [[கொழும்பு]] ஆமர் வீதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web|url=http://today.reuters.co.uk/news/articlenews.aspx?type=worldNews&storyID=2006-08-20T005526Z_01_SP266487_RTRUKOC_0_UK-SRILANKA-SUICIDE.xml&archived=False | title= Suicide bombers - weapon of choice for Sri Lanka rebels | author =Jonathan Lyons | date=August 20, 2006 | publisher = Reuters}}</ref>. இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.