சல்லேகனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Nishidhi_stone_with_14th_century_Old_Kannada_inscription_from_Tavanandi_forest.JPG|thumb| நிஷிதா, எனும் நடுகல்லில் சால்லேகனை நோண்பு கடைபிடிக்கப்படுவதை சித்தரிக்கப்படும் புடைப்புச் சிற்பமும், அதில் உள்ள 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கன்னட கல்வெட்டு.]]
'''சல்லேகனை''' அல்லது '''ஸல்லேகனை''' என்பது [[சைனர்|சைன சமயத்தவர்]] வீடுபேறு அடைவதற்காக [[உண்ணா நோன்பு| உண்ணா நோம்பிருந்து]] உயிர்விடுவதைக் குறிக்கும். <ref name=tamil>[http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=15 [[சமணமும் தமிழும்]] -[[மயிலை சீனி. வேங்கடசாமி]] - வடக்கிருத்தல்]</ref> இந்த செயலானது [[வடக்கிருத்தல்|வடக்கிருத்தலுக்கு]] ஒப்பானது என்றாலும் சைன சமயத்தவர் மட்டுமே கடைபிடிக்க பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பரவலாக இருந்த வடக்கிருத்தல் சைன சமயத்தின் இந்த சல்லேகனையிலிருந்தே தோன்றியது என்று நம்பிக்கையுள்ளது.
சைன சமயத்தின் பெரியவர்கள் வடக்கே வாழ்ந்து மறைந்தவர்கள் என்பதால், அச்சமயத்தினை சார்ந்தவர்கள் வடக்கு திசையை புண்ணியத் திசை என்று கருதினார்கள். அதனால் இந்த சல்லேகனையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோம்பிருப்பதால், இந்த செயலை கடைபிடிக்கும் பிற சமயத்தவர்கள் வடக்கிருத்தல் என்று அழைத்துள்ளனர்.
இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு ஆகிய காரணங்களுக்காக சல்லேகனையை கடைபிடிக்கலாம்.<ref name=tamil/> இந்த முறையில் இறந்துபோவதை [[தற்கொலை]]யல்ல என்று சைனர்கள் நம்பினார்கள். இதனை வாமனமுனிவர் நீலகேசி எனும் நூலில் பதிவு செய்துள்ளார். <ref name=tamil/>
<references /></div>▼
==சல்லேகனை செய்யும் முறை==
* சல்லேகனை செய்ய [[தருப்பைப்புல்| தர்பை]]ப் புல்லின் மீது வடக்கு நோக்கி அமர வேண்டும். அவ்வாறு அமர்ந்து சாகின்ற வரை உணவினை எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இருப்பினும் நீரினை உட்கொள்ளலாம்.<ref name=tamil/>
* இவ்வாறு சல்லேகனையை மேற்கொள்ளும் போது அருகரையும்<ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D</ref>, [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களையும்]] நினைத்து [[தியானம்]] மேற்கொள்ள வேண்டும். வேறு எந்த நினைவுகளையும் கொள்ளுதல் கூடாது. அடுத்த பிறவியில் தேவராக பிறத்தல், பெருஞ்செல்வனாகவோ பிறப்போம் போன்ற எண்ணங்கள் இருக்க கூடாது.<ref name=tamil/>
* அத்துடன் சல்லேகனை செய்யும் போது இதனால் தனக்கு விரைந்து உயிர் போகும் என்று எண்ணுதலும் கூடாது.<ref name=tamil/>
==எதிர்ப்பு==
சல்லேகனை தற்கொலைக்கு ஒப்பானது என பௌத்தம் சாடுகிறது. இதனை பௌத்த காவியமான [[குண்டலகேசி]] பதிவு செய்துள்ளது.<ref name=tamil/>
==ஆதாரங்கள்==
[[பகுப்பு:சைனம்]]
|