'''மார்ட்டின் லூதர்''' (''Martin Luther'', [[நவம்பர் 10]], [[1483]]–[[பெப்ரவரி 18]], [[1546]]) ஒரு கிறித்தவத் துறவியும் [[செருமனி]]ய [[மதகுரு]]வும்மதகுருவும், [[இறையியலாளர்|இறையியலாளரும்]], பல்கலைக்கழகப் பேராசிரியரும், [[புரட்டஸ்தாந்தம்|புரட்டஸ்தாந்தத்தின்]] தந்தையும், [[திருச்சபை]]ச் [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|சீர்திருத்தவாதி]]யும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு [[நாகரிகம்|நாகரிகத்தின்]] போக்கையே மாற்றியது. கிறித்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர் தான் என்று கூற இயலாது. இவருக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பொகீமியாவில் ஜான் அஸ் என்பவரும், ஜான் வேக்கிளிஃப் என்ற ஆங்கிலேய அறிஞரும் தோன்றியிருந்தனர். இவருக்கு முன்னதாக, இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் வால்டர் என்ற பிரெஞ்சுக்காரரைத்தான் உண்மையில் முதலாவது சீர்திருத்தவாதி எனக் கூற வேண்டும். ஆனால், இவருக்கு முன்னர் தோன்றிய சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்று விட்டன.
லூதருடைய [[இறையியல்]], மதஞ்சார்ந்த அதிகாரம் [[விவிலியம்]] மட்டுமே என்னும் அடிப்படையில், [[திருத்தந்தை]]யின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தது.