சியார்ச் வாசிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு |
→இளமைக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்: (edited with ProveIt) |
||
வரிசை 25:
சியார்ச் வாசிங்டனின் தந்தை அகஸ்டின் வாஷிங்டன் நிறைய நிலங்களையும் அடிமைகளையும் பெற்றிருந்த ஒரு செல்வந்தராகவும், இலட்சியமிக்க மனிதராகவும் இருந்தார். இவர் நிறைய ஆலைகளைக் கட்டினார். [[புகையிலை]] விவசாயம் செய்தாார். ஒரு காலத்தில், அவர் [[இரும்பு|இரும்பு]] சுரங்கங்களைத் திறக்கும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவர் ஜேன் பட்லரை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். 1729 ஆம் ஆண்டில் ஜேன் இறந்தார். பின்னர் 1731 ஆம் ஆண்டில் ஆகஸ்டின் மேரி பாலை மணந்தார். அகஸ்டின் மற்றும் மேரி ஆகியோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் சியார்ச்சு வாசிங்டன் மூத்தவராக இருந்தார். சியார்ச் வாஷிங்டனின் தந்தை 11 வயதில் இறந்துவிட்டார், அவர் தனது அண்ணன் லாரன்ஸின் கவனிப்பில் வளர ஆரம்பித்தார். அண்ணன் லாரன்சு அவருக்கு நல்ல வளர்ப்பை அளித்தார்.
1748 ஆம் ஆண்டில், அவர் 16 வயதாக இருந்தபோது, [[வர்ஜீனியா]]வின் மேற்குப் பகுதியிலுள்ள நிலப்பகுதியை ஆய்ந்து நில அளவை மேற்கொள்ளும் குழுவுடன் பயணித்தார். அடுத்த வருடம், லார்டு ஃபேர்ஃபாக்சின் உதவியுடன் வாஷிங்டன் கல்பெபர் கவுண்டியின் அதிகாரப்பூர்வ நில அளவையாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கல்பெபர், பிரெட்ரிக் மற்றும் அகஸ்டா மாவட்டங்களில் நில அளவை மற்றும் ஆய்வில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். இந்த அனுபவம் அவரை வளமிக்க மனிதராகவும், அவரது உடல் மற்றும் மனதை வலிமை மிக்கதாகவும் மாற்றியது எனலாம்.<ref>{{cite web | url=https://www.biography.com/people/george-washington-9524786 | title=George Washington | publisher=Biography.com | accessdate=26 அக்டோபர் 2017}}</ref>
== ஓகியோ ஆற்றங்கைரயும் வாசிங்டனும் ==
மெக்சிக்கோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமெரிக்க கண்டத்தின் கட்டுப்பாட்டிற்கான போட்டியின் காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகியவை ஓஹியோ நதி பள்ளத்தாக்கின் மீது சச்சரவுகளைக் கொண்டிருந்தன. பிரஞ்சு கனடாவில் இருந்து அந்த பிராந்தியத்தில் நுழைந்து பூர்வீக அமெரிக்கர்களுடன் கூட்டுக்களை உருவாக்கியது. வர்ஜீனியாவில் உள்ள ஆங்கிலேய விசுவாச அரசாங்கம் இந்த ஊடுருவல்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஒரு பிரித்தானிய இராணுவ தூதுவராக பணிபுரிந்த வாசிங்டன், தொலைதூரப் பகுதிக்கு தொண்டர்கள் குழுவை வழிநடத்திச் சென்று, எதிரி துருப்புக்களின் பலம் பற்றிய தகல்வகளை சேகரித்தார். பிரஞ்சு நாட்டினர் அந்தப் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவர்கள் மறுத்துவிட்டனர். வாசிங்டன் திரும்பியபோது, மேலும் பிரெஞ்சு விரிவாக்கத்தை நிறுத்துவதற்காக ஓகியோ ஆற்றின் மீது கோட்டை கட்டப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். 1754 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், மிகவும் சிறப்பாக பயிற்சியளிக்கப்படாத, ஆயுதம் தாங்கிய 150 நபர்களைக் கொண்ட படைப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். ஓகியோ ஆற்றின் கரையில் இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மரக்கட்டைகளால் ஆன தடப்பு ஒன்றை அமைக்கக் கிளம்பினார். இம்மரக்கட்டைத் தடுப்பினை அவசியமான கோட்டை என்று அழைத்தார். வழியில், அவர் ஒரு சிறிய பிரெஞ்சு படையை எதிர்கொண்டு உடனடியாக அதைத் தாக்கி, பத்து பிரெஞ்சு வீரர்களைக் கொலை செய்தார். இந்த மோதலின் போது வர்ஜீனியாவில் இருந்து வந்த அறியப்படாத இளம்போராளியும் துப்பாக்கியால் சுடப்பட்டார். பிரிட்டிஷ் தூதருக்கு ஒரு செய்தியை வழங்குவதற்காக துாதுவராக வந்த ஒரு பிரெஞ்சுப் படைவீரர் கொல்லப்பட்டதால், சர்வதேச நெறிமுறைகளின்படி வாசிங்டன் துாதரைக் கொன்ற கடுமையான விதிமீறலில் ஈடுபட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இதுவே பிரெஞ்சு-செவ்விந்தியப்படைகளுக்கும் அமெரிக்கர்களுக்குமான போருக்கான முதல் காரணமாயிற்று. இந்த இடையூறுகளின் விளைவுகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை மற்றும் வெர்சாய்ஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றன. இப்பகுதியில் உள்ள பூர்வீக அமெரிக்கர்கள், பிரஞ்சு-அமெரிக்க முரண்பாட்டை உணர்ந்து, பிரஞ்சுக்கு ஆதரவளித்தனர். இந்த பிரெஞ்சு மற்றும் பூர்வீக அமெரிக்க கூட்டுப்படையானது, வாசிங்டன் மற்றும் அவரது படைப்பிரிவை திணறடித்தனர். அவரால் உருவாக்கப்பட்ட மரத்தடுப்புகளை சிதறடித்தனர். வாசிங்டன் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு சரணடையும் பத்திரத்தில் கையொப்பமிட்டு விட்டு அந்த இடத்தை விட்டுச் செல்ல பணிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தத்தில் வாசிங்டன் இராணுவ நெறிமுறைகளை மீறியதாக ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பிரான்சு தன் மக்களிடம் பெரிய வெற்றியாகக் கொண்டாடியது. பிரித்தானிய படையில் வாசிங்டனுக்கான பதவி உயர்வின் போது புறக்கணிக்கப்பட்டார். பிரிட்டிஷார் தன்னை அவமதித்து விட்டதாக உணர்ந்து வாசிங்டன் இராணுவத்திலிருந்து பதவி விலகினார்.
ஓகியோ ஆற்றின் பள்ளத்தாக்கில் இருந்து பிரஞ்சுப்படையை ஓட்ட சிறந்த வழி இராயல் இராணுவத்திலிருந்து துருப்புகளில் அனுப்பப்பட வேண்டும் என்று இங்கிலாந்து முடிவு செய்தது. அவர்களுடைய தளபதி ஜெனரல் எட்வர்ட் பிராடோக் மோதலில் அனுபவமுள்ள ஒரு உதவியாளர் தேவை என்பதால் பதவியை வாசிங்டனுக்கு வழங்கினார். ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து சாதகத்தைப் பெறுவதற்காக வாசிங்டன் இந்தப் பொறுப்பை ஆர்வமாக ஏற்றுக்கொண்டார்.<ref>{{cite web | url=https://millercenter.org/president/washington/life-before-the-presidency | title=George Washington: Life Before the Presidency | publisher=UVA MILLER CENTER | accessdate=27 அக்டோபர் 2017 | author=Stephen Knott}}</ref>
|