சியார்ச் வாசிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
• 1783 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பாரிசு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை தலைமை படைத்தளபதியாக வாசிங்டன் தொடர்ந்தார். குறைவாக ஊதியம் அளிக்கப்பட்ட பெருநிலப்பகுதியின் இராணுவத்தை சமாதானப்படுத்தும் பொருட்டு முறையான இழப்பீடு கேட்டு அப்பகுதியின் காங்கிரஸிற்கு ஒரு மனுவை கையெழுத்திட்டனுப்பினார். அதன் பிறகு, அவர் தனது வேலையை விட்டுவிட்டு, மவுண்ட் வெர்னானுக்குத் திரும்பினார்.<ref>{{cite web | url=https://www.thefamouspeople.com/profiles/george-washington-18.php | title=George Washington | publisher=The Famous People | date=Last updated June 01, 2017 | accessdate=28 அக்டோபர் 2017 | author=Editors, TheFamousPeople.com}}</ref>
 
== முதல் அமெரிக்க குடியரசுத் தலைவர் ==
 
போருக்குப் பிறகு, வாசிங்டன் தனது தோட்டத் தொழிலில் ஈடுபடுவதையே விரும்பினார். தனது விவசாயப் பண்ணையில் நீண்ட காலம் பணியாற்றாமல் போனதால் உண்டான பாதிப்புகளையெல்லாம் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் கூட தேசிய அரசியலைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்தார். 1785 ஆம் ஆண்டில் மவுண்ட் வெர்னான் மாநாட்டை தனது பண்ணைத் தோட்டத்தில் வைத்து நடத்தினார். 1786 ஆம் ஆண்டில் அன்னபோலியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், 1787 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசியலமைப்புப் பேரவையில் தலைமை தாங்க ஒத்துக்கொண்டார். அவரது ஆளுமையின் தாக்கம் நிறைந்த தலைமைப்பண்பு வந்திருந்த பெருமைமிகு பிரதிநிதிகளைக் கவர்ந்தது. அவரே அமெரிக்காவின் முதல் குடியரசுத்தலைவராக மிகப் பொருத்தமானவர் என்று அவர்கள் கருதினர்.
 
1789 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடைபெற்ற முதல் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாசிங்டன் அனைத்து வாக்குகளையும் வென்றார். அவர், 1789 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் அலுவல் உறுதிமொழியை நியூயார்க் நகரத்தின் ஃபெடரல் அரங்கத்தின் மேல்மாடத்தில் எடுத்துக்கொண்டார். கடினமான அந்தக் காலகட்டத்தில் தனது தொலைநோக்கு கொண்ட நிர்வாகத்திறமையை நிரூபித்தார். அவரது முடிவுகள் பல முன் உதாரணங்களாய் அமைந்தன. ஆரம்பத்தில் $ 25,000 வருடாந்திர சம்பளத்தை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டிய அவர், தன்னுடைய முடிவு பணக்காரர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு வர முடியும் என்ற தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாதே என்பதற்காக, ஊதியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய அரசியலமைப்பை ஒரு செயல்படும் கருவியாக மாற்றியமைத்தார். அதே நேரத்தில் ஒருமைப்பாடு மற்றும் விவேகத்திற்கான எடுத்துக்காட்டாக விளங்கினார். குடியரசுத் தலைவரின் பட்டங்கள் மற்றும் விழாக்கள் குடியரசு நாட்டின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கின்றனவா என்பதை கண்காணிப்பதில் உறுதியாய் இருந்தார். குடியரசுத் தலைவரை அழைப்பதற்கு பேரவை உறுப்பினர்கள் மிகவும் மேன்மைதங்கிய பல அடைமொழிகளை உருவாக்கிக் கொடுத்தபோதும், திருவாளர். குடியரசுத்தலைவர் என்றழைப்பதையே விரும்பினார். 1792 ஆம் ஆண்டில், முதல் பதவிக்கால முடிவில், வாசிங்டன் மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1796-ல் அது முடிவடைந்தபோது, மீண்டும் அப்பதவியில் தொடர்வதை அவர் உறுதியாய் மறுத்து, மவுண்ட் வெர்னானுக்குத் திரும்பினார். இதன் மூலம் இன்றளவும் ஒரு குடியரசுத் தலைவர் இரண்டு முறைகள் மட்டுமே பதவி வகிக்கலாம் என்ற மற்றுமொரு முன்னுதாரணத்தை வாசிங்டன் உருவாக்கிச் சென்றுள்ளார்.<ref>{{cite web | url=https://www.thefamouspeople.com/profiles/george-washington-18.php | title=George Washington | publisher=The Famous People | date=Last updated June 01, 2017 | accessdate=28 அக்டோபர் 2017 | author=Editors, TheFamousPeople.com}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சியார்ச்_வாசிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது