அஹ்மத் இப்னு முபாரக் மௌலானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
==பிந்திய வாழ்க்கை==
அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்துவிட்டு சில காலம் அங்கு தங்கியிருந்தார்கள். பின்னர் சன்மார்க்கப் பணிக்காக, அல்-அஸ்ஹரில் அவர்களோடு படித்த நண்பர் [[அப்துல்லாஹ்_இப்னு_உமர்_பாதீப்_அல்யமானி |அஷ்செய்க் உமர் அப்துல்லாஹ் பாதீப் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்]] உடன் கப்பலேறி இந்தியாவுக்கு பயணமானார்கள். இந்தியாவில் மலாபர் நகருக்கு சென்ற அவர்கள் ,அங்கு ஜிப்ரி மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்து சன்மார்க்கப் பணியில் ஈடுபட்டார்கள்.<ref>''அந்நத்ர்:150வது ஆண்டு விழா நினைவு மலர் (2011)''. கஹடோவிட: பக்கம்-47</ref> இந்தியாவில் பல இடங்களுக்கு பயணம் செய்த அவர்கள், அங்கு மாபெரும் அறிஞரும்,சூபியுமான செய்கு முஹம்மத் அமீன் எபந்தியில் காதிரி ஷாபிய்யி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை சந்தித்து, அவர்களிடம் பல வருடங்கள் கழித்தார்கள். காலப்போக்கில் அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்களின் அறிவாற்றலையும்,அறிவு ஞானத்தையும் கண்டு செய்கு முஹம்மத் அமீன் எபந்தியில் காதிரி ஷாபிய்யி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்களுக்கு காதிரிய்யா தரீக்காவின் கிலாபத்தை வழங்கினார்கள். <ref>''திறப்பு விழா சிறப்பு மலர்: காதிரிய்யதுன் நபவிய்யா தக்கியா பூந்தோட்டம்(1999)''. மல்வானை: பக்கம்-19</ref> அங்கிருந்து, காயல்பட்டிணத்துக்கு வந்து இலங்கையை வந்தடைந்தார்கள். இலங்கை திருநாட்டில் காயல்பட்டிணத்தில் அவர்கள் சந்தித்த [[செய்கு முஸ்தபா|செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி ]] அவர்களை சந்தித்தார்கள். அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்களை தனது செய்காக செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்றார்கள். இவர்கள் இருவரும் இலங்கையின் [[காலி]],[[திஹாரிய]], [[கஹடோவிட]], மல்வானை போன்ற பல இடங்களுக்கு பயணம் செய்தார்கள்.அவ் ஊர்களில் தக்கியாக்களைக் கட்டுவித்து, ராத்தீபு மஜ்லிஸ்களையும் ஏற்படுத்தினார்கள். திஹாரிய பைத்துல் முபாரக் தக்கியா மற்றும் [[பேருவளை]] பைத்துல் முபாரக் தக்கியா ஆகியன இவர்களின் கண்கானிப்பின் கீழ் கட்டப்பட்டதுடன், காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் தலைமையகமாக பேருவளையில் கட்டப்பட்ட அத்தக்கியா விளங்குகிறது. அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்கள் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் கிலாபத்தை செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு வழங்கினார்கள். தனது இறுதிக்காலத்தில் காலியில் தங்கியிருந்த அவர்கள் கி.பி.1866இல் றபிஉல் அவ்வல் பிறை 7இல் காலமானார்கள். அவர்கள் காலி, தளாப்பிட்டிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
 
==மேலும்வாசிக்க==
"https://ta.wikipedia.org/wiki/அஹ்மத்_இப்னு_முபாரக்_மௌலானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது