தெலுங்கு எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கொலுசு கட்டு |
|||
வரிசை 153:
தெலுங்கில் சொல் இறுதியில் நகர ஒற்றெழுத்தை குறிக்க ''ந பொல்லு'' அல்லது '''நகர பொல்லு'''(వకర పొల్లు) என்னும் எழுத்து வடிவம் பயனப்டுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த எழுத்து மறைந்து விட்டது. இவ்வெழுத்து 'న్'ஆம் பிரதி செய்யப்பட்டதால் வழக்கிழந்தது.
====வலபல கிலக=<sub></sub>===
[[படிமம்:Valapla gilaka.JPG|thumb|left|கர்த - కర్త]]
தெலுங்கில், தற்போது ரகர மெய்யொற்றுக்கு பிறகு ஏதேனும் மெய் வந்தால், வருமெய் ஒத்து வடிவில் ரகரத்துடன் இணைந்து விடும். இருப்பினும், பழங்காலத்தில் இன்னொரு முறையும் வழக்கில் உள்ளதாக தெரிகிறது. இதன்படி, வருமெய்யின் வலது புறத்தில் ரகரம் கீற்று வடிவில் காணப்படும், இதுவே வலபல கிலக (వలపల గిలక) என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில், [[கன்னட எழுத்துமுறை|கன்னடத்தில்]] இன்னும் இந்த முறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: கர்ம - ಕ'''ರ್ಮ'''
வரிசை 162:
தெலுங்கில், ட்ஸ்(ṭsa - Dental ca) , ட்ஃஜ(dza - Dental ja) ஆகிய ஒலிகள் உள்ளன. இவை [[பாளி மொழி]]யின் தாக்கத்தினால் தெலுங்கில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. முற்காலத்தில் இருந்தே இவற்றுக்கு வரிவடிவங்கள் இல்லை என்றாலும், ச, ஜ ஆகியவற்றுக்கான வரி வடிவங்களே இவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இடையில், 18ஆம் நூற்றாண்டில் அப்பகவி என்னும் தெலுங்கு இலக்கணவியலாளர் இவ்வொலிகளை வேறுபடுத்த ச,ஜ வடிவங்களுக்கு கீழ் புள்ளி இட வேண்டும் என கூறுகிறார். எனினும் இது வழக்கில் வந்தாதாக தெரியவில்லை. பின்னர், பிரௌன் என்னும் அறிஞர் 1800களில், மொழியை புதிதாக கற்பவர்களுக்கு உதவுவதற்காக ,சாதாரண ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 1உம் பல்லொலி ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 2ஐயும் இட்டு வேறுபடுத்தி, இரண்டு புதிய வரிவடிவங்களை உருவாக்கினார்.எனினும், காலப்போக்கில் ச, ஜ சாதாரணமாக எழுதப்பட பல்லொலிகளுக்கு மட்டும் எண் இரண்டு மேலே எழுதப்பட்டது<ref>http://www.teluguworld.org/Telugu/tchadza.html</ref>. ஆந்திர அரசு மொழியை எளிமையாக்கும் விதமாக இந்த எழுத்துக்களை பாட நூல்களில் சேர்க்கவில்லை. இருப்பினும் இவை முற்றிலும் மறைந்து விட்டதாக கூறவியலாது. இவ்வெழுத்துக்கள் யூனிகோட்டின் 5.1 பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
====கொலுசு கட்டு====
ஆங்கிலத்தை போலவே, தெலுங்கிலும் எழுத்துவடிவங்களையும் சேர்த்து எழுதும் கையெழுத்து வடிவம் இருந்துள்ளது. இது கொலுசு கட்டு(గొలుసు కట్టు) என அழைக்கப்படுகிறது. இந்த கையெழுத்து வடிவம் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வழக்கில் இருந்திருக்கிறது <ref>http://www.engr.mun.ca/~adluri/telugu/language/script/script1d.html</ref> பிறகே இது வழக்கிழந்து விட்டது
===எண்கள்===
|