எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 75:
===இலக்கியக் குறிப்புக்கள்===
சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் [[கண்ணகி]] குறிப்பிடுவதாகச் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வருகிறது<ref>சிலப்பதிகாரம், வழக்குரை காதை 53-55</ref>. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன<ref>சிலப்பதிகாரம், கட்டுரை காதை 58</ref>. பதினெண் கீழ்க்கணக்கு நூலான [[பழமொழி நானூறு]] என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது<ref>பழமொழி நானூறு, அரசியல்பு, பாடல் 242.</ref>. சோழர் காலத்து நூலான [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரியபுராணம்|பெரியபுராணத்திலேயே]] மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது. '''மனு''' [[திருவாரூர்|திருவாரூரில்]] இருந்துகொண்டு சோழ நாட்டை ஆண்ட மன்னன். அவன் மகன் தேரில் விரைந்து சென்றபோது துள்ளியோடிய பசுக்கன்று தேர்க்காலில் சிக்கி இறந்தது. தாய்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் நிகழ்ந்தது அறிந்து பணுவுக்கு நீதி வழங்கும் அறநெறியில் கன்று இறந்தது போலவே தன் மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்றான். <ref>பெரியபுராணம், திருமலைச் சருக்கம், திருநகரச் சிறப்பு, பாடல்கள் 13 - 50</ref>. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த [[இராசராசசோழன் உலா]], [[விக்கிரம சோழன் உலா]], [[குலோத்துங்க சோழன் உலா]] என்பவற்றிலும் இக்கதை வருகிறது.
முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது<ref>indianfolklorist.com இன் [http://indianfolklorist.com/index.php?option=com_content&view=article&id=17&Itemid=16 இந்தப்] பக்கத்தில் இருந்து</ref>. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
===கல்வெட்டறிஞர்கள் மற்றும் புலவர் கருத்துகள்===
====கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம்====
|