சிறுசுனை புரவரி கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்தியாவின், தமிழ்நாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:30, 13 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, சிறுசுனை கிராமத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் கல்வெட்டு உள்ளது .

புரவரி கல்வெட்டு உள்ள சிதைந்த ஆரண்ய விடங்கர் கோவில்

சிதைந்து போன நிலையிலுள்ள சிறுசுனையூர் ஆரண்ய விடங்கர் சிவன் கோவில் எனும் சிதைந்த கோயிலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடம் ஊரின் வடக்கு புறமும், உள்ளூர் குளத்தின் தெற்கு புறமும் அமைந்துள்ளது. இதே இடத்தில் கோயில் இருந்ததை உறுதி படுத்தும் விதமாக அருகே, கி.பி 1243 ஆம் ஆண்டில் விளக்கு எரிக்க பெரியபிள்ளை மருந்தாழ்வான் என்பவர் பக்கல் கொண்ட இருநூறு காசு கொடுத்த கல்வெட்டும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையின் நாற்கல நெல் வழங்கிய செய்தியடங்கிய கல்வெட்டும் உள்ளது. மேலும் இவ்விடத்தில் சதுர ஆவுடை, பகுதியளவு சிதைந்த நந்தி, மயில்வாகனத்துடன் கூடிய முருகன் சிலை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை கிராம மக்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதே சிதைவுகளிடையேதான் இந்த புரவரி கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்த புரவரி உரிமை

அரசிறை எனப்படும் காணிக்கடன் நீக்கப்பட்ட ஊர்களில் அவ்வூரின் நன்செய் புன்செய் முதலிய நிலங்களின் விளைச்சல் வருவாய்க்கு ஏற்றவாறு உள்ளூர் நிர்வாகத்தணிக்கையின் அடிப்படையில், வசூலிக்கப்படும் வரியே “புரவரி”யாக பெறப்பட்டுள்ளது. இதனை வசூலிக்கும் அதிகாரமும் தணிக்கை செய்யும் அதிகாரமும் பெற்ற அதிகாரி சீகரணத்தார் என அழைக்கப்பட்டுள்ளனர். சோழர் ஆட்சியில் இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரகடனப்படுத்தி , ஊர் குடிமக்களின் நிர்வாகத்தலைமை இடமாக விளங்கிய கோயிலில் இந்த ஆசிரியம் கல்வெட்டு நடப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி

மங்கல வரியுடன் ” சிறுசுனையூரான விருதராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் புரவரி சிகரணத்தார் ஆசிரியம்“ என்பதாகும் , இக்கல்வெட்டிலுள்ள செய்தியின் மூலம் சிறுசுனையூர் என்ற இவ்வூர் விருதராஜ பயங்கரன் என்ற பெயருடன் விளங்கிய முதலாம் குலோத்துங்கனின் பெயரால் அழைக்கப்பட்டிருப்பதும், விருத ராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன் சிறு ஊர்களின் தலைமை இடமாக விளங்கியிருப்பதும், இவ்வூரின் “[1]” “சிகரணத்தார்” என்று அக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியே வசூலித்து கொள்ள உரிமை வழங்கியிருப்பதை ஊர் குடிமக்களுக்கு அறிவிக்கவே இந்த [2] நடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின்மூலம் மூலம் சோழர்கால மன்னராட்சி நிர்வாகத்திலேயே வரி வசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி அந்தந்த கிராமங்களின் உள்ளூர்த்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்துள்ளது

மேற்கோள்கள்

  1. புரவரியை
  2. ஆசிரியம் கல்வெட்டு