வானியற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
வானியல் தனக்கென ஒரு பழைமையான வரலாற்றைக் கொண்டிருப்பினும், இயற்பியற் புலத்தில் இருந்து நீண்டகாலமாக பிரிந்திருந்துள்ளது. [[அரிசுடாட்டில்]] கருத்தின்படி விண்பொருட்கள் சீரான கோளவடிவத்தையுடையனவும், வட்ட ஒழுங்குகளைக் கொண்டுள்ளனவுமாகக் கருதப்பட்டன. எனினும் புவிமையக் கோட்பாடு அக்கருத்திலிருந்து விலகியது. இதனால் இவ்விரு கருத்துக்களும் தொடர்பற்றனவாகக் காணப்பட்டன.
 
சாமோசு நகர [[சாமோசின் அரிசுடாக்கசு|அரிசுடாக்கசு]] என்பவர், புவியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன எனக் கருதுவதன் மூலம் வான் பொருட்களின் இயக்கத்தை விவரிக்க முடியுமெனக் குறிப்பிட்டார். ஆனால், புவிமையக் கோட்பாடு வேருன்றியிருந்த அக்காலகட்டத்தில் சூரியமையக் கோட்பாடு முரண்பட்டதும், கேலிக்குரியதுமாக இருந்தது. கி.பி. 16ம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசின் சூரியமையக் கோட்பாடு உருவாகும் வரை பல நூற்றாண்டு காலத்துக்கு புவிமையக் கோட்பாடு ஐயத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிரேக்க, உரோம வானியலாளரான தாலமியின் அல்மகெஸ்ட் எனும் நூலில் குறிப்பிடப்பட்ட புவிமையக் கோட்பாட்டின் செல்வாக்கே இதற்குக் காரணமாயமைந்தது.
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/வானியற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது