"ஜெகசீவன்ராம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
→அரசியல் பணிகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
==அரசியல் பணிகள்==
1931 இல் காங்கிரசில் சேர்ந்தார். சகசீவன்ராம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார். தேர்தலில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். 1936 முதல் 1986 வரை 50 ஆண்டுகள் சட்ட மன்ற நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த்து]] [[காந்தியடிகள்|காந்திஜியின் தலைமையில்]] நடந்த [[அறப் போராட்டம்|சத்தியாகிரகப் போராட்டத்திலும்]], [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்]] தீவிரமாக பங்கு கொண்டு 1940-இல் சிறை சென்றார்.
1934-இல் பிகாரில் ஏற்பட்ட நிலநடுக்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டார்<ref>{{cite web |title=Valedictory Centenary Lecture by President of India on Jagjivan Ram Centenary Function |url=http://presidentofindia.nic.in/sp050408.html |date=5 April 2008 |work= |publisher=[[இந்தியக் குடியரசுத் தலைவர்]] website |accessdate=}}</ref>. அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு உடை வழங்குவதிலும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டார். உதவி முகாம்களில் காந்தியைச் சந்தித்தார். காந்தி ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுபவர் என்று எண்ணினார்.
1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்தார். கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.
|