இரண்டாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==தொடக்க காலமும், அரியணை ஏறலும்==
இவனது இயற்பெயர் எறெயா (இறையா). முடி சூட்டிக்கொண்டபோது புலிகேசி என்னும் பெயர் பெற்றான். இவன்இவர் சாளுக்கிய மன்னன் [[முதலாம் கீர்த்திவர்மன்|முதலாம் கீர்த்திவர்மனின்]] மகன் ஆவான். கிபி 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை கீர்த்திவர்மன் கட்டி அரசன் இறந்தபோது இவன் மிகவும் இளம் வயதினனாக இருந்தான். இதனால் இவனது [[சிற்றப்பனார்]] [[மங்களேசன்]] [[பகர ஆளுனர்|பகர ஆளுனராகப்]] பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான்<ref name=singh>{{cite book|last=Singh|first=Upinder|title=A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century|pages=553–555|date=2009|publisher=Pearson Longman|location=New Delhi|isbn=9788131716779|edition=3rd impr.|url=https://books.google.co.in/books?id=GW5Gx0HSXKUC }}</ref>. மங்களேசனும் திறமையான ஆட்சியாளனாகவே இருந்தான். அவனது காலத்திலும் சாளுக்கிய அரசின் எல்லைகள் விரிவடைந்தன. பதவி ஆசை காரணமாக, எரேயா (இறையா) பருவமடைந்த பின்னரும் அவனுக்கு உரிய அரசுரிமையைக் கொடுக்காமல் தனது வழியில் அரசுரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது மகனை முடிக்குரியவனாக மங்களேசன் அறிவித்தான்.
 
எரேயா (இறையா) [[வாதபி]]யை விட்டுச் சென்று வானவப் ([[கோலார்]]) பகுதியில் மறைந்திருந்து கொண்டு தனது கூட்டாளிகளின் உதவியுடன் படை திரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். [[வேட்டவடக்கூர் கல்வெட்டு]]க் கூறுவதன்படி எலப்பட்டு சிம்பிகே (இளப்பட்டு சிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்து கொல்லப்பட்டான். எரேயா (இறையா) இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய [[அரியணை]]யில் அமர்ந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_புலிகேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது