== ''[[பொதினி]] என்று சங்க காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு [[வையாவி நாடு]]. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் [[பேகன்]]' இவனது மனைவியின் பெயர் கண்ணகி. சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரை கூறித் திருத்தியிருக்கிறார்கள். [[அரிசில் கிழார்]]<ref>புறம் 146</ref> [[கபிலர்]] <ref>புறம் 143</ref> [[பரணர்]] <ref>புறம் 144, 145</ref> [[பெருங்குன்றூர் கிழார், சங்கப்புலவர்|பெருங்குன்றூர் கிழார்]] <ref>புறம் 147</ref> ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி அறிவுரை கூறியுள்ளனர்.'' ==