இந்தியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
==பௌத்த கட்டிடக்கலை==
 
கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் [[கங்கை]]க் கரையோரமாக மக்கள் [[குடியேற்றம்|குடியேற்றங்க]]ளும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் [[பிராமணீயம்|பிராமணீய]]த்துக்கு மாற்றாகப் [[புத்தமதம்|பௌத்தம்]], [[சமணமதம்|சமணம்]] என்னும் [[மதம்|மதங்கள்]] தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. அக்காலத்தில் பரந்த பலம் பொருந்திய [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசன்]] [[அசோகச் சக்கரவர்த்தி]]யின் ஆட்சியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு மத்தியில் பௌத்தம் அரச மதமாகி [[இந்தியா]]வின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அம் மதம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்கமுடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் [[பௌத்தக் கட்டிடக்கலை]] என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி,மு 500250 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம்.
 
==இந்துக் கட்டிடக்கலை==
 
[[இந்துமதம்]] பௌத்தம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது எனினும், கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டிருக்கக் கூடிய இந்துக் கட்டிடங்கள் எதுவும் அறியப் படவில்லை. பௌத்த சமயம் இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னரே இந்துக் கட்டிடக்கலையின் வேகமான வளர்ச்சி ஆரம்பித்தது எனலாம். இந்துக் கட்டிடக்கலையின் அம்சங்கள் பலவும் பௌத்த கட்டிடக்கலையிலிருந்து உருவானவையே.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது