'''காடவர்கள்''' எனப்படுவோர் [[கிபி]] [[13ம் நூற்றாண்டு|13]], [[14ம் நூற்றாண்டு|14]]-ம் நூற்றாண்டுகளில் [[தென்னிந்தியா]]வின் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர். [[பல்லவர்]]களோடு தொடர்புடைய இவர்கள் [[கடலூர்]] பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.
[[முதலாம் கோப்பெருஞ்சிம்மன்]], [[இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன்]] ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், [[மூன்றாம் இராசராசன்]], [[மூன்றாம் இராசேந்திரன்]] ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த [[சோழர்| சோழப்]] பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். [[வட ஆற்காடு|வட ஆற்காட்டிலும்]], [[தென் ஆற்காடு|தென் ஆற்காட்டிலும்]], [[செங்கற்பட்டு|செங்கற்பட்டிலும்]] இவ்விரு மன்னர்கள் பலக் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களை]] விட்டுச் சென்றுள்ளனர்.