அரும்பைத் தொள்ளாயிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
அரும்பை என்பது அரும்பாக்கம். <br />
'''அரும்பைத் தொள்ளாயிரம்''' என்னும் நூல் அரும்பாக்கத்தில் வாழ்ந்த பெருமகன் சிறப்புகளைக் கூறும் நூல். 900 பாடல்களைக் கொண்ட நூல். இந்த நூலைப்பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. நூல் கிடைக்கவில்லை.
*
விக்கிரம சோழனின் படைத்தலைவனாக விளங்கியவன் '''அரும்பாக்கம் மணவிற்கூத்தன்'''. <br />
இவன் படைத்தலைவனாக இருந்த காலத்தில் தில்லை, திருவதிகை வீரட்டானம் ஆகிய கோயில்களில் திருப்பணி செய்தவன். இச்சிறப்புப் பற்றி இந்நூல் இவன்மேல் பாடப்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வரிசை 7:
எண்ணால் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டு தரும்போது முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. <ref>[[இலக்கண விளக்கம்]] பாட்டியல் உரை.</ref>
* பாடியவர்
இதனைப் பாடியவர் ஒட்டக்கூத்தர். சரசுவதி தம்பலம்
* பாட்டுடைத்தலைவனின் வெற்றிகள்
காலிங்கராயன், நரலோக வீரன் என்னும் சிறப்புப் பெயர்கள் மணவிற் கூத்தனுக்கு உண்டு என்பதை அவன் திருப்பணி செய்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விக்கிம சோழன் உலாவில் இவன் ‘கலிங்கர் கோன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். விழிஞம், கொல்லம், கொங்கம், இரட்டம், ஒட்டம், கலிங்கம் ஆகிய ஊர்களில் இவன் வெற்றி கண்டவன். <ref>[[விக்கிரம சோழன் உலா]] கண்ணி 77-79</ref> இத்தகைய சிறப்புப் பெற்றவன்மீது இந்த அரும்பைத் தொள்ளாயிரம் பாடப்பட்டுள்ளது.
|