பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
==பிற தொழில்கள்==
1979 இல் நாக்பூர் தினசரி செய்தித்தாளான தி ஹிடேவாடாவின் உரிமையை சர்வீன்ஸ் ஆஃப் இந்தியா சொஸைட்டியிடமிருந்து புரோகித் பெற்றார். இச்செய்தித்தாள் 1911 இல் கோபால் கிருஷ்ணா கோகலேவால் தொடங்கப்பட்டது. புரோகித் அதன் தற்போதைய நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் நாக்பூரில் உள்ள ஸ்ரீ ராம்தேபாபா பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவராகவும் உள்ளார்.
 
 
=சர்ச்சைகள்=
தமிழக ஆளுநராக பதவியேற்ற பின்னர் நிர்வாக ரீதியில் சில ஆய்வுகளை நடத்தினார், மேலும் மாவட்டந்தோறும் ஆய்வுகளை அரசியலமைப்பிற்குட்பட்டு மேற்கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார் , இதற்கு தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி தவிர பெரும்பாலான அரசியல் இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்றன,மேலும் இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என கருத்து தெரிவித்து வருகின்றன.
 
நிர்மலா தேவி என்னும் கல்லூரி பேராசிரியையின் சர்ச்சை பேச்சுக்கள் அடங்கிய ஒலிநாடாவில் ஆளுநர் தொடர்பாக பேச்சு இடம்பெற்றுள்ளதால் அவரை எதிர்கட்சிகள் பதவி விலக கோரிக்கை விடுத்தன, பின்னர் நடைபெற்ற ஓர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவியதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் ஆளுநர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது