கிரார்துசு மெர்காதோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) added Category:நிலப்படவரைவியல் using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →top: *விரிவாக்கம்* |
||
வரிசை 13:
|other_names =
|education = இலியூவன் பல்கலைக்கழகம்
|known_for = [[மெர்காதோர் வீழல்|மெர்காதோர் வீழலை]] அடிப்படையாகக் கொண்ட உலக நிலப்படம் (1569)<br/>நெதர்லாந்து நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியவர்களில் ஒருவர் <br> [[நிலப்படத் தொகுப்பு|அட்லசு]] என்ற சொல்லை நிலப்படத் தொகுப்பைக் குறிக்க உருவாக்கியவர்
| influences = {{Plainlist|
* [[தொலெமி]]
வரிசை 29:
நெதர்லாந்தின் நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியர்களில் இவரும் ஒருவராவார். இது மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையமாக அக்காலக்கட்டத்தில் (ஏறத்தாழ 1570கள்–1670கள்) இருந்தது. தனது வாழ்நாளில் இவரே உலகின் மிகவும் புகழ்பெற்ற நிலப்படவியலாளராக விளங்கினார். நிலப்படவரைவியலைத் தவிர இவருக்கு சமயவியல், மெய்யியல், வரலாறு, கணிதம், [[புவியின் காந்தப்புலம்]] ஆகிய துறைகளிலும் ஆர்வம் இருந்தது. செதுக்குதல், [[வனப்பெழுத்து]] உலக உருண்டைகளையும் அறிவியல் கருவிகளை உருவாக்குதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார்.
அவரது காலக்கட்டத்தைச் சேர்ந்த மற்ற அறிவியலாளர்களைப் போலன்றி மெர்காதோர் அதிகம் பயணிக்கவில்லை. அவரது புவியியல் அறிவை நூல்களைப் படித்தே வளர்த்துக் கொண்டார். அவரது சொந்த நூலகத்தில் 1000 நூல்களையும் நிலப்படங்களையும் சேகரித்து வைத்திருந்தார். இவற்றை தன்னைக் காணவந்தோர் மூலமாகவும் ஆறு மொழிகளில் மற்ற அறிவியலாளர்கள், பயணிகள், வணிகர்கள், மாலுமிகளுடன் நிகழ்த்திய கடிதப் போக்குவரத்தாலும் சேகரித்தார். மெர்காதோரின் துவக்க கால நிலப்படங்கள் அளவில் பெரிய வடிவங்களாக சுவற்றில் தொங்குவிடுமாறே இருந்தன. ஆனால் வாழ்நாளின் பிற்பகுதியில் நூற்றுக்கும் கூடுதலான வட்டார நிலப்படங்களை சிறிய வடிவங்களில் வெளியிட்டார். இவற்றை எளிதாக நூல் வடிவில் தொகுக்க முடிந்தது. 1595இல் இத்தகைய முதல் [[நிலப்படத் தொகுப்பு|நிலப்படத் தொகுப்பை]] வெளியிட்டார். இதற்கு முதன்முதலாக ''அட்லசு'' என்று பெயரிட்டார். இச்சொல்லை நிலப்படத் தொகுப்பிற்கு மட்டுமன்றி இகலுலகின் உருவாக்கம், வரலாறு என அனைத்தையும் குறிப்பிடுவதற்காக உருவாக்கினார். முதல் பெரும் புவியியலாளராக விளங்கிய மாரிதானியாவின் அரசர் அட்லசு நினைவாகவே இப்பெயரை உருவாக்கினார். இந்த அரசர் [[அட்லசு (தொன்மவியல்)|டைட்டன் அட்லசின்]] மகனாவார்; எனினும் இவ்விரு தொன்மக் கதைகளும் விரைவிலேயே ஒருங்கிணைந்தன.
==மேற்கோள்கள்==
|