இலங்கை இனமோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''மொழி தொடர்பில் கட்சிகளின் செல்வாக்கு'''
இலங்கையின் இனமோதலுக்கு பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இதனை வேறு விதத்தில் கூறினால் இவ்வின மோதலானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு காணப்படுகின்றது எனலாம். இம்மோதலானது பெரும்பாலும் மொழி, கல்வி வேலை வாய்ப்பு மற்றும் காணிப் பகிர்வ என்பவற்றை உள்ளடக்கியதாகும். அத்துடன் வன்முறை என்பதும் முக்கியத்தவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இதன் மீதான கட்சிகளின் தாக்கத்தினை நோக்கும் போது முதலில் 1943 ஜனவரி மாதத்தில் ஜே.ஆர் ஜயவர்தன அரசாங்க சபைக்கு சிங்கள மொழி தனிச்சட்டம் தொடர்பான முன்மொழிவினை முன்வைத்தார். இதில் சிங்களம் அரச கரும, நிர்வாக, கல்வி மொழியாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அரசாங்க பாடசாலைகளில் கல்வி மொழியாக தமிழ் மொழி மற்றும் சுதேச மொழிகளால் போதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கு ஆதரவாக சி.டபிள்யூ டபிள்யூ கன்னங்கர, வீ.
தனிச் சிங்கள மொழியை எடுத்துக் கொண்டால் அனைத்து மக்களுடைய ஞாபத்துக்கு வரும் விடயம் 1956ஆம் ஆண்டு பண்டார நாயக்காவினால் கொண்டுவரப்பட் “சிங்களம் மட்டும்” என்ற சட்டமே ஆகும். இச்சட்டத்திற்கு முன்னர் நாட்டின் நீதிமன்ற மொழியாக, தந்திச் செயன்முறைகளிலும் ஆங்கில மொழியே உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்பட்டது. பாராளுமன்ற விவாதங்கள் கூட ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போது தமிழ் அல்லது சிங்களத்தில் உரையாற்ற சபாநாயகரின் விசேட அனுமதியை பெறவேண்டி இருந்தது.
இவைகளை இல்லாமற் செய்யவூம் தனது தேர்தலில் கீழ்மட்ட கிராமப்புற சிங்கள மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவூம் தாம் பதவிக்கு வந்தால் சிங்களத்தை 24 மணிநேரத்திற்குள் நாட்டின் தேசிய மொழியாக பிரகடனப்படுத்துவதாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க 1954 தேர்தல் பிரசாரங்களின் போது
1955 ஆம் ஆண்டு டிசம்பர் தேர்தலுக்கு முன்னரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கொள்கையின் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியூடன் இணைந்த முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் லீக், அகில இலங்கை சோனகர் இயக்கம் என்பன இதனை ஒத்த வகையில் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இது தொடர்பாக எதிர்ப்புக்கள் காணப்பட்டன.
|