இலங்கை இனமோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 13:
 
இவைகளை இல்லாமற் செய்யவூம் தனது தேர்தலில் கீழ்மட்ட கிராமப்புற சிங்கள மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவூம் தாம் பதவிக்கு வந்தால் சிங்களத்தை 24 மணிநேரத்திற்குள் நாட்டின் தேசிய மொழியாக பிரகடனப்படுத்துவதாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க 1954 தேர்தல் பிரசாரங்களின் போது குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தான் இக்கொள்கையை ஆரம்பத்தில் முன்வைத்தாலும், ஜே.ஆர் ஜயவர்தனாவூம் அற்கு முன்னரே தனிச்சிங்கம் மட்டும் என்ற கொள்கையினை உடையவராக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, 1954, 1955களில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் பிரதமருமான சேர் ஜோன் கொத்தலாவல அவர்களும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கு முக்கிய அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என அவருடைய யாழப்பாண விஜயத்தின் போது குறிப்பிட்டார். எனினும், இவருடைய இக்கொள்கைக்கு பௌத்த பிக்குகள், சிங்கள தேசிய வாதிகள் ஆகியோரின் எதிர்ப்பு காண்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பண்டாரநாயக்க முயற்சி செய்தார். இதனால், அவருடைய தேர்தல் கொள்கை உள்நாட்டு பௌத்த தேசியவாதத்தை மையமாக கொண்டதாக காணப்பட்டது. விசேடமாக பௌத்த பிக்குகள், ஆசிரியர்கள், சுதேச வைத்தியர்கள், விவசாயிகள் மற்றும் நகர்புற தொழிலாளர் என்ற ஐம்பெரும் பிரிவினரை உள்ளடக்கி, ஐம்பெரும் சக்திகளை கொண்ட தாரகை மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
 
 
1955 ஆம் ஆண்டு டிசம்பர் தேர்தலுக்கு முன்னரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கொள்கையின் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியூடன் இணைந்த முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் லீக், அகில இலங்கை சோனகர் இயக்கம் என்பன இதனை ஒத்த வகையில் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இது தொடர்பாக எதிர்ப்புக்கள் காணப்பட்டன.
வரி 18 ⟶ 19:
 
1956 தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக சிங்கள தேசியவாதக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் ஆதரவூ பண்டாரநாயக்காவூக்கு கிடைத்தது. அத்துடன் 1956ஆம் ஆண்டானது புத்த பெருமானின் 2500ஆம் ஆண்டு ஜனன தினமாகவூம் (புத்த ஜயன்தி) காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால், சிங்கள பௌத்த பிக்குகளின் ஆதரவினை பண்டாரநாயக்க பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒன்றாகவே தனிச்சிங்கள மொழி என்பது காணப்பட்டது எனலாம். அத்துடன், இத்தேர்தல் பிரசாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியூம் தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் சிங்களம் உத்தியோக பூர்வ மொழியாக்க வேண்டும் என்று உறுதியளித்தனர். ஆகவே பண்டாரநாயக்க சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குவதற்கு முந்திக் கொண்டதில் ஆச்சரியமில்லை.
 
 
எனவே தமது சுய அரசியல் இலாபத்திற்காக எந்தவொரு சமூகத்தை பாதித்தாலும் அதனை முந்திக் கொண்டு செயற்படுத்துகின்ற போக்கு அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பான்மை சிங்கள இனத்தவரின் வாக்குகளை மையமாக கொண்டு மற்றுமொரு சிறுபான்மையினமாகிய தமிழ் சிறுபான்மை இனத்தவர்களது உரிமைகளை மறுக்கின்றமையையூம் அவதானிக்கலாம். இவ்வாறு, கட்சிகள் செயற்படுவதன் மூலம் இரு பிரதான விடயங்கள் தெளிவாகின்றன. அதாவது தேர்தலில் வெற்றி பெறுதல் மற்றும் இனவாதம் என்பனவாகும். பண்டாரநாயக்கா நாடுபூராகவூம் சிங்கள மக்களது ஆதரவினை பெற்று வெற்றிப் பெற்றார். இதனை தொடர்ந்து இவருடைய வாக்குறுதிப்படி 1956 ஜூலை 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் சிங்களம் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியூம் வாக்களித்தது. இதன் பிரகாரம் முழு நாட்டினதும் நிருவாக, நீதி மொழியாக சிங்களம் ஆக்கப்பட்டது. இதனை தமிழ் மக்கள் எதிர்த்தனர். இதற்கு எதிராக சமஷ்டி கட்சி பல எதிர்ப்பு ஊர்வலங்கைளை நடாத்தியது.
 
 
இந்த தமிழ் மொழி சிங்கள சட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரக நடவடிக்கைகளை சமஷ்டி கட்சியினர் வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொண்டனர். வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்பு நோக்கிய இந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட போது, இதனை தடுப்பதற்காக சிங்கள மொழி பாதுகாப்புச் சபை தலைவர் எல்.எச் மேதானந்தா போன்ற நாட்டின் உயர் மதிப்பை பெற்றோரும் அமைச்சரான கே.பி.எம் ராஜரத்தின ஆகியோர் 1956 ஜூன் ஐந்தாம் திகதி காலி முகத்திடலில் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை வன்முறைக் கொண்டு தடுத்தனர். இதில் அமைச்சர் ராஜரத்னாவின் ஆதரவாளர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இவ்வன்முறையில் பல தமிழர்கள் தாக்கப்பட்டதுடன் சில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும், பண்டாரநாயக்கா தான் பலம் உள்ளவர் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காக இவ்வாறான பல எதிர்ப்புக்கள் மத்தியிலும், 1956 ஜூலை 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் உதவியூடன் பாராளுமன்றத்தில் சட்டமாக்கியது. இதன் பிறகு மேலும் பல கலவரங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டது. இதனை இராணுவம், பொலிஸ் கொண்டு அரசாங்கம் தடுத்தது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இனத்துவ ரீதியாக கூட்டுச் சேர்ந்து செயற்படும் அதேவேளை, சிங்கள மக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதிலும் ஈடுபட்டனர்.
 
 
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டம் தொடரும் வேளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பண்டாரநாயக்கா இணங்கினார். இதனால் சமஷ்டிக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தி 1956 ஜூலை 26ஆம் திகதி பண்டா – செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் தமிழ் மொழிக்குரிய அந்தஸ்த்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உரிய அதிகாரப் பண்முகவாக்கம் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ்வூடன்படிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்ததுடன், பண்டாரநாயக்காவூக்கு ஆதரவூ வழங்கிய பௌத்த பிக்குகள் கடுமையாக எதிர்த்தனர். பத்தேகம விமலவம்ச தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் பண்டாரநாயக்காவின் வீட்டுக்கு முன்னாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனமோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது