தெலுங்கு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இந்த பக்கம் தெலுங்கு பற்றி உள்ளது. தமிழ்நாடு இல்லை.
No edit summary
வரிசை 16:
தெலுங்கு [[திராவிட மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. மற்ற திராவிட மொழிகளைப் போலவே தெலுங்கு மொழி [[சமஸ்கிருதம்|சமசுகிருதத்தில்]] இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் [[ஆரியமொழி]] நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிட மொழி பேசப்பட்டு வந்தது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன.
 
தெலுங்கு பழந்திராவிட மொழியில் இருந்து தோன்றிய ஒரு மொழி. இது தக்காண உயர்பீட நிலப்பகுதியில் உள்ள மக்கள் பேசும் தென்-நடு திராவிட மொழித் துணைக்குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தைச் சார்ந்த மற்ற மொழிகள் [[கொண்டி]], [[கூய்]], [[குவி]] போன்ற தெலுங்குடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய மொழிகள் ஆகும். இந்தியாவில் மிக அதிகளவில் பேசப்படும் திராவிட மொழி தெலுங்கே.
 
தெலுங்கு மற்ற மொழிகளின் சொற்களை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். சமசுகிருத மொழி தெலுங்கு இலக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தியது போல், வேறெந்த மொழியும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை என்று கூறுவர் (இதேக் கருத்தை வங்காளி, மராத்தி மொழியாளர்களும் கூறுவர்). தெலுங்கு மொழியில் பல எழுத்துக்கள் முக்கியமாக ஹகரம் கலந்த எழுத்துக்கள் சமசுகிருத மொழிக்காகவே நெடுங்கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சமசுகிருத்தின் தாக்கம் அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது தான். உருது மொழி மற்றும் ஆங்கில மொழி சொற்களைக்கூட தெலுங்கு மொழி ஏற்றுக்கொண்டுள்ளது.
வரிசை 22:
== சொற்பிறப்பியல் ==
 
கி.பி. 1000 ஆண்டுக்கு முந்டைய கல்வெட்டுகளில் ''தெலுகு'' என்ற சொல் காணமுடியாது. 11வது நூற்றாண்டில் ''"தெலுங்கு பூமிபாலுரு''" (<big>తెలుంగు భూమిపాలురు </big>), ''"தெல்கரமாரி''" ( <big>తెల్గరమారి</big>), ''"தெலிங்ககுலகால''" (<big>తెలింగకులకాల</big>), ''"தெலுங்க நாடோளகண மாதவிகெறிய" ''(<big>తెలుంగ నాడోళగణ మాధవికెఱియ</big>)'' போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
 
11ஆம் நூற்றாண்டுக்கு பிறகே ''தெனுகு'' என்ற சொல் வழக்கில் வரத் துவங்கியது. சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து 'தெலுங்கு (தெலுகு)' தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். திரிலிங்கம் என்பது காலேஷ்வரம், ஸ்ரீசைலம், திரக்ஷராமம் முதலிய மூன்று சிவத்தலங்களை குறிக்கும். இம்மூன்று இடங்களும் தெலுங்கு தேசத்தின் எல்லைகளாக அமைந்த காரணத்தினால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றன்ர். சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து 'தெலுங்கு (தெலுகு)' தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் இது பின்னர் எழுந்த பண்பாட்டு அடிப்படையில் தரும் காரணம் எனவும் ''தெலுகு'' என்ற சொல்லே பழமையானது எனவும் வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 12ஆம் நூற்றாண்டில் ''"நவலக்ஷ தெலுங்கு(" <big>(నవలక్ష తెలంగు</big>)'' என்ற குறிப்பு காணப்படுகிறது.
 
தெலுங்கு என்ற சொல்லின் தோற்றம் குறித்து பலவாறாகவும் கூறப்பட்டுள்ளது. "தெலு" என்றால் வெண்மை என்று பொருள் எனவே வெண்மையான மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதே நேரத்தில் ''தென்'' - என்ற பழந்திராவிட சொல்லிலிருந்து, ''தென்னகத்தின் மக்கள்'' என்ற பொருளில் தெலுங்கு தோன்றி இருக்கலாம் எனவும் கருதுவது உண்டு.
 
எது எவ்வாறாக இருப்பினும், தெலுங்கு (<big>తెలుగు</big> - "தெலுகு") தேசத்தின் பெயர் தெலிங்க தேசம் அல்லது தெலங்க தேசம் என்றிருந்திருக்க வேண்டும். எனவே அதன் வேர்ச்சொல் ''தெலி'' (<big>తెలి</big> - "பிரகாசம்")'' ஆகவும் இருக்கலாம். தெலுங்குப்பண்டிதர்கள் தெலுங்கு (<big>తెలుగు</big> - "தெலுகு") என்பதன் சரியான வடிவம் ''தெனுகு'' எனக் கூறுகின்றனர். தெனுகு என்றால் தேன் போன்ற மொழி என்று பொருள் ''(<big>తేనె</big> (தேனெ) - "தேன்")''. தேன் போன்ற இனிய மொழி ஆகையால் ''தெனுகு'' என்பது பிற்காலத்தில் ''தெலுகு'' என ஆகியிருக்கலாம் என்பது இவர்கள் கருத்து
 
== மொழி வரலாறு ==
வரிசை 36:
தெலுங்கு மொழியில் வரலாற்றைப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்
 
=== கி. மு 200 - கி.பி 500 ===
 
பழங்கால [[பிராகிருதம்|பிராகிருத]]/[[சமஸ்கிருதம்|சமசுகிருத]] [[பிராமி]] [[கல்வெட்டு]]களில், தெலுங்கு இடம் மற்றும் பெயர்கள் காணப்படுகின்றனர். இதிலிருந்து ஆந்திர தேசத்தை ஆண்ட [[சாதவாகனர்]]கள் பிராகிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எனத்தெரிகிறது. தெலுங்குச் சொற்கள் [[மகாராஷ்டிரி]] பிரகிருதத்தில் எழுதப்பட்ட பாடல்களில் காணப்படுகின்றன.
 
=== கி. பி 500 - கி.பி 1100 ===
 
தெலுங்கு மொழி, கல்வெட்டுகள் முதன்முதலாக ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.பி 575ஆம் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ரேனாட்டி TAMIL''Tamil'' சோழர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர்களே முதன் முதலாக சமஸ்கிருதத்தை விடுத்து உள்ளூர் மொழியான தெலுங்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இவர்களுக்குப் பிறகு பிற சாளுக்யர்களும் கல்வெட்டுகளைத் தெலுங்கில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் தெலுங்கு இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. தெலுங்கில் எழுதப்பட்ட முதல் இலக்கியமாகக் கருதப்படும் ''நன்னய்யரின் மகாபாரதம்'' இக்காலகட்டத்திலே எழுதப்பட்டது. மேலும், இதே காலத்தில் தெலுங்கு மொழியில் பல்வேறு ஒலியியல் வேறுபாடுகள் ஏற்பட்டன.
 
=== கி. பி 1100 - கி.பி 1400 ===
 
இக்காலக்கட்டத்தில் இலக்கிய தெலுங்கு பேச்சு வழக்கில் இருந்து மிகவும் வேறுபடத்துவங்கியது. ஒரு நிலையில் கேதனர் என்ற புலவர் மக்கள் பயன்படுத்தும் சொற்களை இலக்கியங்களில் கையாளாகாது, எனக்கருத்தை வெளியிட்டார். மேலும் பல வடமொழி நூல்கள் தெலுங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டது. மேலும் தெலங்காணா பகுதிகளில் சுல்தான்களின் இதே காலக்கட்டதில்தான் துவங்கியது
 
=== கி. பி 1400 - கி.பி 1900 ===
 
இக்காலத்தில், தெலுங்கு மற்ற இந்திய மொழிகளைப் போலவே பலவிதமான வேறுபாடுகளை சந்தித்தது. இசுலாமிய தாக்கத்தின் காரணமாக தெலங்காணா வழக்கு மற்றப் பொதுத் தெலுங்கு வழக்கிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டது. தெற்கில் கோதாவரி நதி பகுதிகளில், விஜயநகர அரசு 1336 முதல் 1600 வரை மிகவும் செல்வாக்குடன் திக்ழ்ந்தது. விஜய நகர அரசர் கிருஷ்ண தேவராயரின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என கருதப்படுகிறது. தெலுங்கு இலக்கியம் இவரது காலத்தில் மிகவும் எழுச்சியுடன் திகழ்ந்தது. விஜய நகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு தெலுங்கு பேசும் பகுதிகளில் இசுலாமிய ஆட்சி நிறுவப்பெற்றது. இதன் காரணத்தால் பல பாரசீக மற்றும் உருது சொற்களும் தெலுங்கு மொழியில் கலந்தன.
 
=== கி. பி 1900 முதல் இன்று வரை ===
 
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் தாக்கம் தெலுங்கு மொழியில் ஏற்பட்டது. குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் இத்தாக்கம் உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் பல்வேறு நவீன கால இலக்கியங்கள் தோன்ற துவங்கின.
வரிசை 99:
<br />వ స శ ష హ
 
</big></font>
<br />
தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாகப் பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்துச் சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவடைகிறது. எனவே தான் இம்மொழியின் இனிமையைக்கருதி ஆங்கிலேயர்கள் இதை ''கிழக்கின் இத்தாலிய மொழி'' (''Italian of the East)'') என அழைத்தனர். </big></font>தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார்.
 
தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார்.
 
{{cquote|'''வடமொழியின் சக்கரை பாகு, தமிழின் அமிழ்தத்தண்மை கன்னடத்தின் கஸ்தூரி நறுமணம் இவை அனைத்தையும் ஒரு சேர உடையது தான் தித்திக்கும் தெலுங்கு'''}}
வரி 109 ⟶ 106:
== இலக்கியம் ==
 
தெலுங்கு இலக்கியத்தை கீழ்க்கண்ட காலங்களாக பிரிப்பர்:
 
* நன்னய்யருக்கு முற்காலம் - கி. பி 1020 வரை;
* புராண காலம் - கி.பி 1020 முதல் கி. பி 1400 வரை;
* ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி. பி 1510 வரை;
* பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி. பி 1600 வரை;
* தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி. பி 1820 வரை;
* நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை.
 
தெலுங்கு மொழியில் முதல் இலக்கியமாக நன்னய்யரின் (1022-10631022–1063) மகாபாரதம் கருதப்படுகிறது. இவரது காலத்துக்கு பிறகு [[திக்கனா|திக்கன்னா]], எர்ரன்னா போன்ற பல்வேறு புலவர்கள் தெலுங்கு இலக்கியம் செறிவடைந்தது. பிறகு ஸ்ரீநாதர் (1365-14411365–1441) என்பவர் பிரபந்த இலக்கியத்தை பிரபலமாக்கினார். வேறு சிலர் வடமொழி நூல்களை தெலுங்கு மொழியில் மொழிப்பெயர்த்தனர். ஸ்ரீநாதருக்கு பிறகு போதனா (1450-15101450–1510), ஜக்கன்னா, கௌரனா போன்றோர் சமயம் தொடர்பான இலக்கியங்களை எழுதினர்.
 
எனினும், பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் காலம் தான் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. விஜயநகர காலத்தில் தஞ்சாவூர் மற்றும் மதுரையில் பல்வேறு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றின. பிறகு சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டதால் தெலுங்கு இலக்கியத்தில் சற்று தொய்வு ஏற்ப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தான் தியாகராயர் தன்னுடைய கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் எழுதினார்.
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது