தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம் ... ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 19:
{{Main|இலங்கைத் தமிழர்}}
 
[[இலங்கை]]யில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை [[இலங்கைத் தமிழர்]], [[இலங்கைத் தமிழ் முசுலீம்கள்]], [[மலையகத் தமிழர்]] என மூன்று வகையினராக அடையாளப்படுத்தலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இசுலாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முசுலீம்கள் ஆவர். 1800-களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு என வருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களினதும் மனித உரிமைகளைச் சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே [[ஈழப் போர்|ஈழப்போராட்டம்]] வெடித்தது.
 
=== தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் ===
தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்கு பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாக, சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் [[கூலி]]களாகக் குடியமர்த்தப்பட்டனர். [[மலேசியா]] ([[கடாரம்]]), [[சிங்கப்பூர்]], [[பர்மா]] (அருமணதேயம்), [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]] (ஜாவா (சாவகம்), சுமத்ரா), [[கம்போடியா]] ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் வசிக்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்துக்கும் மேலாகத் தனது மக்கள் தொகையில் 10%க்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தனது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.
 
=== ஆப்பிரிக்காவில் தமிழர் ===
வரிசை 32:
{{Main|ஐரோப்பியத் தமிழர்}}
 
இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950-களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக [[ஐரோப்பா]]வுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். [[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]], [[யேர்மனி]], [[இத்தாலி]], [[சுவிற்சர்லாந்து]], [[நோர்டிக் நாடுகள்]], ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400,000 – 500000–500,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
 
=== ஓசியானியாவில் தமிழர் ===
வரிசை 42:
{{Main|வட அமெரிக்காவில் தமிழர்}}
 
வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950-களுக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983-இல் இலங்கையில் வெடித்த [[கறுப்பு யூலை]] இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர். இன்று கனடாவில் 250,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளனர்.
 
== சமூக அமைப்பு ==
{{Main|தமிழர் சமூக அமைப்பு}}
 
தமிழர் சமூக அமைப்பு [[சாதி]]ய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் [[இறைமறுப்பு]] கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவிர நம்பிக்கையைக் குறைத்துள்ளன.
 
== மொழியும் இலக்கியமும் ==
வரிசை 56:
 
=== சங்க இலக்கியம் ===
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் [[தொல்காப்பியம்]]. இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் [[சங்க இலக்கியம்]] எனப்படுகிறது. பழந்தமிழரின் [[அகம்|அகப்பொருள்]] மற்றும் [[புறப்பொருள்]] பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் [[செடி]]கள், [[பறவை]]கள், [[விலங்கு]]கள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் [[எட்டுத்தொகை]], [[பத்துப்பாட்டு]], [[பதினெண் கீழ்க்கணக்கு]] என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் [[திருக்குறள்]], இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. [[திருவள்ளுவர் ஆண்டு]] முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறை.
 
=== சங்கம் மருவிய கால இலக்கியம் ===
வரிசை 62:
 
=== பக்தி கால இலக்கியம் ===
கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வலுப்பெற்றதது. [[சைவ சமயம்|சைவமும்]] [[வைணவம்|வைணவமும்]] ஆதரவு பெற்றன. சைவ [[நாயன்மார்]]கள் பல ஆயிரம் [[தேவாரம்|தேவாரங்களைப்]] பாடினர். வைணவ [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்]] பாடப்பெற்றன. இக்காலத்தில் [[திருமந்திரம்]] [[சிவஞானபோதம்]] உட்பட பதினான்கு [[சைவ சித்தாந்தம்|சைவ சிந்தாந்த]] நூற்களும் இயற்றப்பட்டன. [[கலிங்கத்துப்பரணி]], [[கம்ப இராமாயணம்]] ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. கி.பி 850-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 1250-ஆம் ஆண்டு வரை [[சோழர்|சோழப் பேரரசு]] சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
=== இடைக் கால இலக்கியம் ===
வரிசை 68:
 
=== தற்கால இலக்கியம் ===
18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. [[உ. வே. சாமிநாதையர்]], [[சி. வை. தாமோதரம்பிள்ளை]], [[ஆறுமுக நாவலர்]] உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட [[சமற்கிருதம்|சமற்கிருத]] சொற்களையும் [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள]] நடையையும் தடுக்க [[தனித் தமிழ் இயக்கம்]] தொடங்கப்பட்டது. [[தேவநேயப் பாவாணர்]], [[மறைமலை அடிகள்]], [[பாரதிதாசன்]], [[பெருஞ்சித்திரனார்]] ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
 
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் [[சுப்பிரமணிய பாரதியார்]] கருதப்படுகிறார். இக்காலத்தில் [[புதுக்கவிதை]] பிறந்தது. [[உரைநடை]] வீச்சு பெற்றது. [[புதினம்]], [[சிறுகதை]], [[கட்டுரை]] ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954–1968 காலப்பகுதிகளில் [[தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)|தமிழ்க் கலைக்களஞ்சியம்]] பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தினர்]] தமிழைக் கருவியாகப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த [[அம்பை]], [[மாலதி மைத்ரி]], [[குட்டி ரேவதி]], [[சுகிர்தராணி (கவிஞர்)|சுகிர்தராணி]], [[உமாமகேஸ்வரி]], [[இளம்பிறை]], [[சல்மா]], [[வெண்ணிலா]], [[ரிஷி]], [[மாலதி (சதாரா)]], [[வைகைச்செல்வி]], [[தாமரை (கவிஞர்)|தாமரை]] உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழின்]] அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் [[தமிங்கிலம்]] தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
 
== பண்பாடு ==
வரிசை 96:
{{Main|தமிழர் ஓவியம்}}
 
ஓவியம் ஒரு [[கவின் கலை]]. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களைத் [[தமிழர் ஓவியம்]] எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர்.
 
சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது.<ref>மாத்தளை சோமு. (2005). ''வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்''. திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 113</ref> இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்."<ref>[http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm ''தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்''! - வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்]</ref> . தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. [[வரைகதை]], [[தமிழ் வரைகலை|வரைகலை]], [[தமிழ் இயங்குபடம்|இயங்குபடங்கள்]] என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும்.
 
=== நாடகக்கலை ===
{{Main|தமிழர் நாடகக்கலை}}
 
இயல், இசை, நாடகம் என்று [[முத்தமிழ்]]களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தித் தொன்று தொட்டு தமிழர், நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. தமிழர் நாடகங்கள் தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
 
=== இசைக்கலை ===
{{Main|தமிழிசை}}
[[படிமம்:Raga du soir au Collège des Bernardins (4730079050).jpg|thumb|right|200px|[[கருநாடக இசை]]]]
தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு '''தமிழிசையாகச்''' செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. [[தொல்காப்பியர்]] இயற்றிய '"[[தொல்காப்பியம்]]' " என்னும் நூலில் [[இசை]]யைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம்.
 
=== ஆடற்கலை ===
வரிசை 115:
ஆடலைக் [[கூத்து]] என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர்.<ref>ஆறு. அழகப்பன். (2001). ''தமிழ்ப் பேழை''. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 276.</ref> தமிழர் மத்தியில் [[கும்மி]] ஆட்டம், [[கோலாட்டம்]], [[பரதநாட்டியம்]] என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. [[ஒயிலாட்டம்]], [[மயிலாட்டம்]], [[கரகாட்டம்]], [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]] என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு.
 
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய [[நடனம்|நடனமா]]கும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - [[பாவம்]], ர - [[இராகம்|ராகம்]], த - [[தாளம் (இசை)|தாளம்]] என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
 
=== தற்காப்புக் கலைகள் ===
வரிசை 123:
 
=== யோகக்கலை ===
இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை '''யோகக் கலை''' அல்லது "யோகாசனம்" ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் [[தமிழ்]] நூலான [[திருமந்திரம்]] மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் [[தமிழ்நாடு]] அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது<ref>[http://www.hindu.com/thehindu/holnus/004200803311655.htm தமிழ்நாட்டுப் பள்ளிகளில் யோகக்கலை கட்டாயப் பாடமாக்கப்பட்டது]</ref>. [[சிவானந்தர்|சுவாமி சிவானந்தா]], [[யாழ்ப்பாணம்]] [[சிவயோக சுவாமி|யோகர் சுவாமி]]யின் சீடரான [[சிவாய சுப்ரமணியசுவாமி|சத்யகுரு சிவாய சுப்ரமணியசுவாமி]], [[சுவாமி சச்சிதானந்தா]], [[வேதாத்திரி மகரிசி]] போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்கள்.
 
=== திரைப்படக்கலை ===
வரிசை 133:
 
=== பேச்சுக்கலை ===
அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில், நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், எனப் பல துறைகளில் தமிழில் பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]], [[அண்ணாத்துரை]], [[பெரியார்]], [[ம. பொ. சிவஞானம்]], [[கிருபானந்த வாரியார்]] போன்றோர் சிறந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் [[சிவாஜி கணேசன்]] புகழ் பெற்றவர். இன்று [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[வைகோ]], [[சீமான்]], [[சுகிசிவம்]] ஆகியோர் சிறந்த பேச்சாளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கன நடாத்தப்பட்ட [[தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு]] நிகழ்ச்சியில் [[விசயன் (பேச்சாளர்)|விசயன்]] வெற்றி பெற்றார். ஈழத்து பேச்சுப்பாரம்பரியம் [[ஆறுமுகநாவலர்]] போன்ற சமயப்பிரசங்கிகள் முதல் அரசியல் பேச்சாளர்கள் ஈறாகப் பலவகையில் வளர்ச்சிபெற்று உள்ளது. போராட்ட காலங்களில் பல போராளிகளின் பேச்சுக்கள் மக்களுக்கு விடுதலை வேட்கை தூண்டுவதில் முன்னின்றன. இலக்கிய சொற்பொழிவுகளில் கம்பன் கழகத்து [[இலங்கை ஜெயராஜ்]] போன்றவர்கள் பரவலாக அறியப்பெற்றாவர்கள்.
 
== நாட்டாரியல் ==
வரிசை 152:
தலைவெடித்துப் போறனையா<br />
|}
தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கிப் பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.<ref>கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகாம்.</ref> பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ. கா: 2008 - தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய [[கானா பாடல்கள்]], ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச் செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன.
 
== சித்தரியல் ==
வரிசை 181:
{{Main|தமிழர் மெய்யியல்}}
 
தமிழர் எத்தகைய [[உலகப் பார்வை]]யுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் 'தமிழர் "மெய்யியல் எனலாம்". தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருவி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனத் தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர். இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாகத் தம்மை வளர்த்துக்கொண்டனர்.
 
தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது.<ref>திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம் - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் - [[கீற்று (இணையத்தளம்)]] நேர்காணல் - [http://www.keetru.com/literature/interview/as_pannerselvam.php]</ref>
 
== வாழ்வியல் ==
வரிசை 209:
தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் '''தமிழர் அரசியல்''' குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.
 
அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. [[உலகத்தமிழர்|உலகத் தமிழர்களுக்கென]] ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது [[தமிழ்நாடு|தமிழக]] முதல்வர் [[மு. கருணாநிதி]] கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார்.<ref>''Protect Tamils in Malaysia, Karunanidhi urges PM''. AOL Indo Asian News Service. November 27, 2007.[http://www.aol.in/news/story/2007112709089012000005/index.html]</ref> ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் [[தென்னாபிரிக்கத் தமிழர்]] நடாத்திய [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டங்களும்]] உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன.<ref>''South African Indians oppose Indian Arms to Sri Lanka''. [[தமிழ்நெற்]] Friday, 21 March 2008. [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25044]</ref>
 
== அமைப்புகள் ==
வரிசை 220:
 
== உலகமயமாதலும் தமிழரும் ==
[[உலகமயமாதல்]] பல்வேறு பண்பாடுகளை உள்வாங்கி ஒரு உலகப் பண்பாட்டை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இந்த உலகப் பண்பாடு இன்றைய ஆங்கில, மேற்கத்தைய ஆதிக்க ஈடுபாடுகளையே பெரிதும் எதிரொளிக்கும். இத்தகைய நிலையில் தமிழ் மொழி, பண்பாடு, சூழல், அறிவு சிதைந்து போக வாய்ப்புள்ளது. அதே வேளை தமது அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஏற்று மேம்பட முடியும். அதாவது இருப்பதை அழிக்காமல் மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்துதலாகவும் உலகமயமாதலைப் பார்க்கலாம்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது