இலங்கை இனமோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 6:
இலங்கையின் இனமோதலுக்கு பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இதனை வேறு விதத்தில் கூறினால் இவ்வின மோதலானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு காணப்படுகின்றது எனலாம். இம்மோதலானது பெரும்பாலும் மொழி, கல்வி வேலை வாய்ப்பு மற்றும் காணிப் பகிர்வ என்பவற்றை உள்ளடக்கியதாகும். அத்துடன் வன்முறை என்பதும் முக்கியத்தவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இவ்விதமாக, முன் குறிப்பிட்ட விடயங்களில் சுதந்திரத்தின் பின்பு ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன எவ்விதமான கொள்கைகளை பின்பற்றின என்பதுடன் இவைகளினால் எவ்வாறு இனமோதலுக்கான அடித்தளம் இடப்பட்டது என்பது தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது.
 
==123==
 
 
இதன் மீதான கட்சிகளின் தாக்கத்தினை நோக்கும் போது முதலில் 1943 ஜனவரி மாதத்தில் ஜே.ஆர் ஜயவர்தன அரசாங்க சபைக்கு சிங்கள மொழி தனிச்சட்டம் தொடர்பான முன்மொழிவினை முன்வைத்தார். இதில் சிங்களம் அரச கரும, நிர்வாக, கல்வி மொழியாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அரசாங்க பாடசாலைகளில் கல்வி மொழியாக தமிழ் மொழி மற்றும் சுதேச மொழிகளால் போதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கு ஆதரவாக சி.டபிள்யூ டபிள்யூ கன்னங்கர, வீ. நல்லையன், டி.பி ஜாயா போன்றோர் ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார்கள். ஜே.ஆர் ஜயவர்தன வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். எனினும், சிங்கள மொழி அழிந்து போகக்கூடிய மொழி என்ற ரீதியில் அதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவ்வாறு அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டி செயற்படுத்துவதற்கு சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதன் பின்பு அரசியல் வாதிகள் தமது சுய நலன்களுக்காக மொழியை உபயோகிக்க முற்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனமோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது