பிரம்மபுத்திரா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
அருணாச்சலப் பிரதேசத்தில் இது சியாங் என அழைக்கப்படுகிறது. திபெத்தில் உயரமான இடத்தில் பயணித்த ஆறு விரைவாக உயரம் இழந்து சமவெளியை அடைகிறது. அந்த சமவெளி இது டிகாங் என அழைக்கப்படுகிறது. சமவெளியில் சுமார் 35 கிமீ தூரம் பாய்ந்த பின் இதனுடன் டிபாங் ஆறு சேருகிறது பின் அசாமிற்றிகுள் நுழைவதற்கு முன் லோகித் ஆறு சேருகிறது. அதன் பின்பே இவ்வாறு பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. போடோ பழங்குடிகள் இதை தங்கள் மொழியில் பர்லங்-பதூர் என அழைக்கின்றனர். அசாமில் இவ்வாறு சில இடங்களில் 8 கிமீக்கும் மேலான அகலத்துடன் பயணிக்கிறது.
அசாமில் இவ்வாறு பெரியதாக எக்காலத்திலும் தண்ணீர் வற்றாமல் ஓடுகிறது. அசாமில் இமயமலையில் தோன்றும் பல ஆறுகள் இதனுடன் இணைகின்றன. இவற்றில் தான்சிறி, கோப்பிலி, டிகோகு, புரி-திகிங், சியாங், சுபான்சிறி, பர்ந்தி பரலி, மனசு, சங்கோசு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டிபுர்கார், லக்சிமிபுர் மாவட்டங்ளில் இவ்வாறு இரு கிளைகளாக பிரிகிறது. வடக்கு கிளை கெர்குட்டியா சூடி என்றும் தென் கிளை பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது. சுபான்சிறி வடக்கு கிளை கெர்குட்டியா சூடியுடன் இணைகிறது. கிட்டதட்ட்ட 100 கிமீ பயணம் செய்த பின் அவை மீண்டும் இணைந்து ஓரே ஆறாக செல்கிறது. அந்த இடைவெளியானது மாசுலி தீவு என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் பெரிய ஆற்றுத்தீவு ஆகும். சகுவகாத்தி அருகில் இதன் அகலம் ஒரு கிமீ, இதுவே அசாமில் இதன் குறுகிய அகலமாகும். அதனால் அங்கு சராய்காட் போர் 1676 மார்ச்சில் நிகழ்ந்தது. சராய்காடிலேயே முதல் சாலை, ரயில் தண்டவாளம் உடைய ஈரடக்கு பாலம் 1962 ஏப்பிரலில் அமைக்கப்பட்டது. . அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது.
===வங்காள தேசம்===
==மேற்கோள்கள்==
|