சிறுவாணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களால்]] கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசும்]] [[கேரள அரசு]]ம் ஆய்வுகள் நடத்தி ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர். இதன்படி கோவை நகரின் ''வீட்டு, சமூக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவையான நீரைத்தேக்கிட'' (1300 மில்லியன் கனஅடி) கேரள அரசு [[சிறுவாணி_அணை|சிறுவாணி அணையைக்]] கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது<ref>[http://books.google.co.in/books?id=hhrRboi5kOcC&pg=PA141&lpg=PA141&dq=siruvani+river&source=bl&ots=c7oWQ2qXj7&sig=-G3GQ8jBYZM9em9wGu0v5PzFVts&hl=en&ei=avHfSvjOKMeXkAXZiLgg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBIQ6AEwBA#v=onepage&q=siruvani%20river&f=false River disputes in India: Kerala rivers under siege S. N. Sadasivan - 2003 - Business & Economics - 238 pages]</ref>. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. இது கோவை, பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயண இடமாக விளங்குகிறது.
 
== சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றாலம்குற்றால அருவி ==
சிறுவாணி மலைகளிலிருந்து உருவாகும் பெரியாறு, மேற்கு மலைத்தொடர்களின் கிழக்குச்சரிவில் பாய்ந்து மேலும் பல சிற்றாறுகளுடன் இணைந்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது. இவ்வாற்றில் [[சிறுவாணி_நீர்வீழ்ச்சி|சிறுவாணி அருவி]] அல்லது கோவை குற்றாலம் அருவி எனவும் அழைக்கப்பட்ட கோவைக் குற்றால அருவி அமைந்துள்ளது . கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இங்கு செல்ல அனுமதி கிடையாது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுவாணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது