கல்வராயன் மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
இந்த மலை [[விழுப்புரம்]] மாவட்டத்தின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இந்த மலையின் மேற்கே [[சேலம்]], [[தருமபுரி மாவட்டம்]], கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே [[திருவண்ணாமலை மாவட்டம்]] ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
== சுற்றுலா இடங்கள் ==
கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் [[கோமுகி அணை]]யும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. பூங்காவில் பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. குளியலறை வசதிகளும் [[நீர்வீழ்ச்சி|அருவி]]க்கு அருகில் செய்யப்பட்டுள்ளன.மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாகியுள்ளது. சுற்றுலா பயசிகள் படகில் சென்று வரலாம். காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.
 
கல்வராயன் மலைக்கு அரிகில் உள்ள தொடர்வண்டி நிலையம் விழுப்புரம் தொடர்வண்டி நிலையமாகும், அங்கிருந்து பேருந்தில் கல்வராயன் மலை செல்லலாம். [[கள்ளக்குறிச்சி]]யிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கல்வராயன்_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது