தம்மபதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புத்தர் கூறிய வாக்கியங்களின் தொகுப்பு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தம்மபதம்''' பெளத்த மதப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:30, 12 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

தம்மபதம் பெளத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.

கெளதம புத்தர் அருளிய அறவுரைகளும் முதலானவை பெளத்தத்தின் ‘திரிபிடகங் கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை விநயபிடகம், சுத்தபிடகம், அபிதம்மபிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில், குத்தக நிகாயம் என்ற பகுதியில் தம்ம பதம் என்ற இந்நூல் அமைந்துள்ளது.

பாளி மொழியில் அமைந்த தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அமைகின்றது. இதனால், பெளத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது.

தம்மபதம் என்பது அறவழி, அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப்பெறுகின்றது.

முதலாம் பெளத்த சங்க மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது என புத்தகோசரால் கூறப்படுகின்றது.[1]

மேற்கோள்கள்

  1. தம்மபதம் : நவாலியூர் நடராஜன்; குமரன் புத்தக இல்லம், கொழும்பு; பக்கம் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்மபதம்&oldid=2552191" இலிருந்து மீள்விக்கப்பட்டது