சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 39:
==புராணம்==
[[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரிய பகவானின்]] மனைவி [[சந்தியா (இந்துத் தொன்மவியல்)|சுவர்ச்சலா]]. இவருக்கு [[வைவஸ்தமனு|மனு]], [[யமன் (இந்து மதம்)|எமதர்மன்]], [[யமி|யமுனை]] என மூன்று பிள்ளைகள். நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக சுவர்ச்சலா, தன்னுடைய சக்தியை இழந்திருந்தாள். அவள் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினாள். அதை சூரியனிடம் சொன்னால், அவர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில், தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தாள். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள்.
இதையடுத்து சுவர்ச்சலா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனிடம் இருந்து வந்தாள். அவளுக்கு கிருதவர்மா என்ற மகனும், தபதி என்ற மகளும் பிறந்தனர். இதில் கிருதவர்மா என்பவரே பின்னாளில் சனீஸ்வரன் என்று பெயர் பெற்றார். பிறந்தது முதலே சிவபெருமானிடம் தீவிர பக்தி கொண்டவராக இருந்தார் கிருதவர்மா. ஒருமுறை தன் தாயிடம், ‘ஈசனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்க, சாயாதேவியோ, ‘தவம் செய்ய வேண்டும்’ என்றாள்.
|