வடமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rajesh14031972 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2555710 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''வடமொழி''' என்பது [[பிராகிருதம்]] (Prakrits), [[சமசுகிருதம்]] (Sanskrit) போன்ற மொழிகளுக்கு கொடுக்கப்பட்ட பொதுப்பெயர். தமிழகத்திற்கு வடக்கில் இவை பேசப்பட்டதால் இவற்றை வடமொழி என்று தமிழில் பொதுவாகக் குறித்தனர் என்பது புனையப்பட்ட கருத்து.'வட' என்ற சொல் சமஸ்கிருத மொழியில் 'ஆல'(மரம்) என்பதைக் குறிக்கும். (உ.ம் :வடவிருக்ஷம்- ஆலமரம், வடவாரண்யம்- திருவாலங்காடு) . ஆலமரத்தினடியில் குருவான தக்ஷிணாமூர்த்தி அமர்ந்து உருவாக்கிய மொழி என்பதால்  வடபாஷை  அல்லது  வடமொழி என்று ஆனது. தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வடசொல்லுக்கு உரை எழுதுகையில் பாகத மொழிகளை வடசொல்லுக்குரிய மொழிகள் என வலியுறுத்துகிறார்.<ref>எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை</ref> இன்னும் சில ஆய்வாளர்கள் தொல்காப்பியம் கூறும் வடசொல் என்பது பாகத மொழிகளையே குறிக்கும் எனவும் கூறியுள்ளனர்.<ref>http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051452.htm</ref>
 
தொல்காப்பிய உரையாசிரியர்களில் மற்றொருவரான இளம்பூரணரும், [[நன்னூல்]] உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான ''[[வடசொல்]]லுக்கு'' இலக்கணம் கூறும்போது ''ஆரிய மொழி'' என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக ''வடமொழி'' என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர்.<ref>வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ,<br />எயுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே<br />என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (எச்சவியல் 5) உரை எழுதும் [[இளம்பூரணர்]] "வடசொற் கிளவி என்று சொல்லப்படுவன; '''ஆரியத்திற்கே''' உரிய எழுத்தினை ஒரீஇ, இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையனவாகும் சொல் என்றவாறு" - என்று எழுதுகிறார்.</ref> <ref>'''ஆரியமொழி'''யுள் அச்சு என்று வழங்கும் உயிர் பதினாறனுள்ளும் இடையில் நின்ற ஏழாம் உயிர் முதல் நான்கும் ஈற்றில் நின்ற இரண்டும் ஆன ஆறும் ஒழிந்து நின்ற அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் பத்தும் அல் என வழங்கும் முப்பத்தேழு மெய்யுள்ளும் க, ச, ட, த, ப என்னும் ஐந்து வருக்கத்தின் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டு நிற்கும் மூன்றும் ஒழிந்த க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம என்னும் பத்தும் ய, ர, ல, வ என்னும் நான்கும் ளவ்வும் ஆகும் இருபத்தைந்தும் தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவெழுத்தாம். இவையன்றி மேல் உயிருள் ஒழிந்த ஆறும் ஐந்து வருக்கங்களினும் இடைகளின் ஒழிந்த பதினைந்தும் முப்பதாம் மெய் முதலான எட்டனுள் ளகரம் ஒழிந்த ஏழும் ஆன இருபத்தெட்டும் ஆரியத்திற்குச் சிறப்பெழுத்தாய்த் தமக்கு ஏற்ற பொதுவெழுத்தாகத் திரிந்து '''வடமொழி''' ஆம் என்றவாறு<br />
"https://ta.wikipedia.org/wiki/வடமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது