சுரோடிங்கரின் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன? ==
இந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள [[பூனை]] ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் [[நீர்|நீரில்]] [[ஐதிரோசயனைடு]] (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடியானது மூடிய ஒரு குழல்குப்பியில் உள்ளது. இக் காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் [[வளிமம்]] அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு [[கதிரியக்கம்|கதிரியக்கப்]] பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது. சோதனை செய்யும் காலத்தில், ஒரேயொரு [[அணு]] சிதைவுற்றாலும் ஓர் [[உணர்வி]]யின் உதவியால் இயங்கி, ஒரு [[சுத்தியல்]] சழன்று அடித்து, குழல்குப்பியை உடைத்து விடும். எனவே அதில் இருக்கும் ஐதரரசசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும். ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து, சுத்தியால் அடிபட்டு, குழல்குப்பி உடைந்து, ஐதரசசயனைடியக் காடி வெளியேறி பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று அறிய முடியாது. இப்படி ஒரு பார்வையளரால் அறிய முடியாததால், குவாண்டம் இயங்கியல் விதியின் [[நேரடுக்குப் பண்பு|நேரடுக்குப் பண்பின்]] படி பூனை உயிருடனும் உயைரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில் உள்ளது என்னும் (பொதுவாழ்வில்) முரண்தரும் முடிவுக்கு
வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்தப்பின்தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது, எனவே இரண்டில் ஒரு நிலையில்தான் காண முடியும். இதனை பார்வையாளரின் முரண்தருகுழப்பம் (observer’s paradox) என்று அழைக்கப்படும். அதாவது பார்வையாளர் என்ன நிலையில் உள்ளது என்று அறிய முற்படும்பொழுது உண்மையாக உள்ளநிலை கெடுகின்றது. பார்வையிடுதல், உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகக் கொளளப்படுகின்றது. இதனை

மேற்கண்ட பருகருத்தை நாம் அன்றாடம் வாழும் உலக உலகின் நிகழ்வுகளாலும் ''ஒருவாறு ''புரிந்துகொள்ளலாம் ''ஆனால் இதுவே அல்ல இந்தமேற்குறிப்பிட்ட பார்வையாளர் முரண்குழப்பம்'' முரண்குழப்பநிலை. ஓர் அறையின் வெப்பநிலையை அளக்க ஒரு வெப்பமானி ஒன்றை வைத்துக் கண்டு பிடித்தால் அங்குஅறைக்குள் வைக்கும் வெப்பமானி அவ்வறையின் வெப்பநிலையை மாற்றுகின்றது (அங்குள்ள வெப்பத்தைச் சிறிதளவாவது உள்வாங்கி ஈர்ப்பதால்). அறையின் அளவு வெப்பமானியின் அளவைவிட மிக அதிகமாக இருப்பதால், அறையின் வெப்பத்தில் ஏற்படும் மாற்றம் மிகச்சிறியதுமிகமிகச்சிறியது, ஆனால் அறையின் அளவு
வெப்பமானியின் அளவோடு ஓப்பிடும் பொழுது சிலமடங்கே என்னும் அளவில் இருக்கும் என்றால், அறையின் வெப்பம் கணிசமான அளவு மாற்றம் அடையக்கூடும். எப்படியாயினும், ''அளக்கும் கருவி, அளக்கும் சூழலை மாற்றுகின்றது'' (சிறிதளவாவது) என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. இங்கு ஆனால், சுரோடிங்கர் பூனை என்பதின்வழி சுட்டப்ப்ட்டது, மிகு நுண்ணிய குவாண்டம் இயங்கியல் தொழிற்படும் பொருட்களில் பார்வையாளர் (எவ்வகையிலேனும் “உள்ள” நிலையை அறிய முற்படும் ஒன்று), உண்மையில் உள்ளநிலையைக் குலைக்கும் (நேரடுக்குப் பண்பை இழக்கச்செய்யும்) என்பது கருத்து.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கரின்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது