தீர்த்தங்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Tirthankaras.jpg|right|thumb|ரிசபதேவர் (இடது)மற்றும் [[மகாவீரர்]] (வலது)]]
 
'''தீர்த்தங்கரர்''' என்பவர் [[சமணம்|சமண]] சமயத்தின் படிசமயத்தின்படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். 'பிறவிப்பெருங்கடலைக் கடந்த ஞானி' என்பது பொருள். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். நம்மிடம் நண்ணியிருப்பவனை 'நண்பன்' என்பது போன்றது இது. ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.
 
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன. இவர்களதுரிஷபர் வாழ்நாள்என்பவர் பற்றியமுதல் கணக்குதீர்த்தங்கரராக ஒன்றும் உள்ளதுஅறியப்படுகிறார். <ref>க மகாவீரர் 24-வது தீர்த்தங்கரர் ஆவார்.ஸ்ரீபால், அஞ்சிவது அஞ்சாமைதீர்த்தங்கரர்களின் பேதமைகொள்கைகள் என்னும்மற்றும் தலைப்பில்கூற்றுகளே எழுதியுள்ள'சமணம்' கட்டுரைஎன்ற மதமாக உருவெடுத்திருக்கிறது. தீர்த்தங்கரர்கள் இறைவனின் நிலையைப் பெற்றவர்கள் எனவும், அருகன்அவர்களை தத்துவம்வணங்கும்படியும் சமணமதம் கூறுகிறது. சமணமதத்தைத் தோற்றுவித்தவர் ரிஷபர் என்றும், மாதமகாவீரர் இதழ்என்றும் ஆகஸ்டுஇருவிதமான 2012கருத்துக்கள் நிலவுகின்றன.
 
== மகாவீரர்(கி.மு.540-கி.மு.467)==
இவர் கி.மு.540-ல் வைஷாலி நகரில் குண்டக்கிராமத்தில் சத்திரியக் குலத்தலைவர் சித்தார்த்தர் என்பவருக்கும், லிச்சாவி மன்னரின் சகோதரியான திரிசலா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். வர்த்தமானர் என்பதே இவரது இயற்பெயர். ஓர் சராசரி மனிதரைப் போலவே இவர் இளமையில் கல்வியையும், அரண்மனை வாழ்க்கையையும் வாழப் பெற்றார். யசோதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து பிரியதர்சனா என்ற பெண்ணிற்குத் தந்தையானார்.
 
தம் 30-வது வயதில் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு விடைதேட, உண்மைநிலையை அறிய குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவியானார். 12 ஆண்டு தேடலுக்குப் பின் வாழ்க்கையின் உண்மைநிலையை அறிந்து, மக்களால் 'ஜீனர்' என அழைக்கப்பட்டார். தியானநிலையின்மூலம் பேரறிவைப் பெற்று, தமது கருத்துக்களைப் பலவித இடங்களுக்குச் சென்று மக்களுக்குப் போதித்தார். பார்சவநாதர் என்னும் 23-வது தீர்த்தங்கரரே இவரது குரு ஆவார். 30 ஆண்டுகள் போதனைகளிலேயே செலவிட்ட அவர் தமது 72-வது அகவையில் முக்தி அடைந்தார். இவர் பேசிய மொழி [[பிராகிருதம்]] ஆகும்.
 
==தீர்த்தங்கரர்களின் வாழ்நாள்==
தீர்த்தங்கரர்களின் வாழ்நாள் பற்றிய கணக்கு ஒன்றும் உள்ளது. <ref>க.ஸ்ரீபால், அஞ்சிவது அஞ்சாமை பேதமை என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை, அருகன் தத்துவம், மாத இதழ் ஆகஸ்டு 2012
* காலப்பெயர்க் கணக்கு
: 84 லட்சம் ஆண்டுகள் = ஒரு பூர்வாங்கம்
வரி 36 ⟶ 44:
# [[பார்சுவநாதர்]] - 100 ஆண்டுகள்
# [[மகாவீரர்]] - 72 ஆண்டுகள்
 
==சமணமதக் கொள்கைகள்==
* அகிம்சை
* மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை
* கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிர்வாண நிலையை அடைவது(இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும்).
* எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்
* நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு
* மனிதர்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது
* முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 
==சமணமத வளர்ச்சி==
மக்களை அதிகம் கவர்ந்த மதங்களில் சமணமும் ஒன்றாகும். ஏனெனில் இம்மதக் கருத்துக்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தன. மேலும் இம்மதத்தை அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் இந்தியா முழுமையும் இம்மதம் பரவியது. தமிழ்ச் சங்கங்கள் போல சமணமதமும் சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது.
 
== சமணமத அழிவிற்கான காரணங்கள் ==
# கொல்லாமைக் கொள்கை
# திகம்பரர், சுவேதம்பரர் என்ற பிரிவுகளாக சமணமத உடைவு
# பல்லவர், சோழர், பாண்டியர்களின் தாக்குதல்
# சாதிப் பிரிவுகளின் தோற்றம்
# முடியைப் பிடுங்குதல், பட்டினி போன்ற கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகள்
# இந்துசமய மறுமலர்ச்சி
# பிரபலமாகாத சீடர்கள்
# புத்த சமய வளர்ச்சி
 
==சமணமதக் கொடைகள்==
# சமண இலக்கிய நூல்கள் பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாயின.
# சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைய ஆரம்பித்தன.
# கல்வி மறுக்கப்பட்டோருக்கு சமணக் கல்வி அளிக்கப்பட்டது.
# இராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள பில்வாரா ஆலயம் கட்டப்பட்டது.
# எல்லோரா, பண்டேல்கண்டு ஆகிய இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் கட்டப்பட்டன.
# விலங்குகள் பலியிடப்பட்டது குறைய ஆரம்பித்தது.
 
==இதனையும் காண்க==
வரி 46 ⟶ 84:
==ஆதாரங்கள்==
*[http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=3 சமணசமயம் தோன்றிய வரலாறு]
* தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்-மேல்நிலை முதலாம் ஆண்டு-2004-ம் ஆண்டு பதிப்பு
 
* www.bbc.com/../jainism/
 
* www.qcc.cuny.edu/../jainism.htm
 
{{தீர்த்தங்கரர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/தீர்த்தங்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது