இவர்திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், [[சீர்காழி]] என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது [[உமாதேவியார்]], [[சிவபெருமான்|சிவபெருமானு]]டன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே [[கோயில்|கோயிலி]]லுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் [[தேவாரம்|தேவார]]த்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் [[மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்]] ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் [[மேலக்கடம்பூர்]] மட்டுமே.