[[படிமம்:Balarama.jpg|thumb|250px|பலராமன் அல்லது '''சங்கர்ஷனர்''']]
[[இந்து மதம்|இந்து மதத்தில்]], '''பலராமன்''' [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] அண்ணன் ஆவார். இவர் ''பலதேவன்'' , ''பலபத்திரன்'', ''கலாயுதன்'' என்றும் அழைக்கப்படுகிறார். [[வைணவம்|வைணவத்திலும்]] [[தென்னிந்தியா|தென்னிந்திய]] இந்து புராணங்களிலும் பலராமன் [[விஷ்ணு]]வின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் [[விஷ்ணு]] படுத்திருக்கும் [[ஆதிசேஷன்|ஆதிசேஷனின்]] வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு '''சங்கர்ஷனர்''' என்ற பெயரும் உண்டு. இவர் [[வசுதேவர்|வசுதேவருக்கும்]] [[ரோகிணி தேவி]] என்ற அவரின் முதல் மனைவிக்கும் பிறந்ததவர். இவரது மனைவியின் பெயர் [[ரேவதி]], இவரின் தங்கையின் பெயர் [[சுபத்திரை]] ஆவாள்.
==வரலாறு==
இந்து சமயத்தில் [[கண்ணன்|கண்ணனின்]] அவதாரக் கதைகளைச் சொல்வது [[வியாசர்]] எழுதிய [[ஸ்ரீமத்பாகவதம்|பாகவதபுராணம்]]. கண்ணனின் அண்ணன் பலதேவர் என்றும் அழைக்கப்படும் பலராமர். இவர் [[ககுத்மி]] என்ற அரசனின் மகள் [[இரேவதி]]யை மணந்ததில் ஒரு விசித்திரம் உள்ளது. ஏனென்றால் ககுத்மியும் ரேவதியும் தோன்றியது [[கல்பகாலம்|வைவஸ்வத மன்வந்தரத்தின்]] முதல் மகாயுகத்தில். பலராமர் தோன்றியது அதே மன்வந்தரத்தில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் 28-வது மகாயுகத்தின் துவாபர யுகத்தில். இடையில் 27 x 43,20,000 மனித ஆண்டுகள் உள்ளன. இந்தப் புராணக்கதை ஸ்ரீமத்பாகவதத்தில் 9-வது ஸ்கந்தம் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.
==ககுத்மி==
வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தின் முதல் யுகமான [[கிருதயுகம்|கிருதயுகத்தில்]] இச்சம்பவம் நடந்தது. அரசன் ககுத்மி [[வைவஸ்வத மனு]]வின் பேரனுடைய பேரன். ககுத்மி தன் பெண் ரேவதிக்கு மணம் முடிப்பதில் ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டார். பூவுலகத்தில் உள்ள யார் சொல்லையும் கேட்பதில்லை என்று தீர்மானித்தார். எல்லோரையும் படைத்து எல்லாமறிந்த [[பிரம்மா|பிரம்மனையே]] கேட்டுத் தெளிவடைவது என்று பிரம்ம லோகத்திற்கே சென்றார். போகும்போது தன் பெண் ரேவதியையும் அழைத்துச் சென்றார். கிருதயுகத்தில் மேலுலகத்திற்கும் பூவுலகிற்கும் அரசர்கள் இப்படிப் போய்வருவது சாத்தியமாம்.
==பிரம்மலோகத்தில்==
வரிசை 21:
==உசாத்துணைகள்==
* Shrimad Bhagavata. Tr. by Swami Tapasyananda. Sri Ramakrishna Math, Madras 600004 (2003)