முசுகுந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 4:
முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள்.முசுகுந்தன் என்பவனைப் பற்றி [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] விவரங்கள் இருக்கின்றன. அவன் பெரும் முனிவனாகவும், பல [[நாடு]]களைத் தன் கீழ் கொண்டு வந்த பேரரசனாகவும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எல்லாம் [[கங்கை]]க் கரையில் இருக்கின்றன. அவனுக்கும் புகார் நகருக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற விதத்தை, 'அமரனிற் பெற்று, தமரில் தந்து" என்கிறது [[சிலப்பதிகாரம்]]. அதாவது, அமரன் என்று சொல்லபப்டும் [[இந்திரன்|இந்திரனி]]டமிருந்து பெற்றதை, முசுகுந்தன் தன் தமருக்கு, அதாவது தன்னைச் சேர்ந்தோருக்குத் தந்தான் என்று பொருள் அமைகிறது. அதாவது [[சோழர்]]கள் முசுகுந்தனுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. அந்தத் தொடர்பு என்ன என்பது [[1905]] -ஆம் வருடம் [[திருவாலங்காடு]] என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்புத் தகடுகளின் மூலம் தெரிகிறது.
 
'''நாளங்காடி பூதம்:'''நாளங்காடி என்னும் ஒரு கடைத்தெரு. அந்தக் கடைத் தெருவில் நாளங்காடிப் பூதம் என்னும் பூதம் குடி கொண்டுள்ளது. பூதம் என்றால் [[பேய்]], பிசாசு போன்ற மூட நம்பிக்கை அல்ல. வழி வழியாக சோழநாட்டு [[மக்கள்]] அதனை வணங்கி வந்துள்ளனர். [[தெய்வம்|தெய்வ]] சக்தி கொண்ட ஒன்றாக அது இருக்கவே, அதற்கு மக்கள் [[பொங்கல் (உணவு)|பொங்கலிட்டு]], பூசை செய்து வணங்கி வந்தனர். இதனை [[இளங்கோவடிகள்]] [[இந்திர விழா]]வூரெடுத்த காதையில் விவரித்துள்ளார்.
 
* முசுகுந்தன் [[இந்திரன்|இந்திரனிடமிருந்து]] தியாராசரைப் பெற்றுவந்து திருவாரூரில் கோயில்கொள்ளச் செய்தார் என்று [[திருவாரூர் நான்மணிமாலை]] என்னும் நூல் குறிப்பிடுகிறது.
* உம்பர் விமானம் உகைத்தவன் என மூவருலா [[சோழர் பரம்பரை]] இவனைக் குறிப்பிடுகிறது.
==மகாபாரதக் கதை==
ஒரு சமயம், [[சிவபெருமான்]], மனித வடிவம் கொண்டு ஒரு [[வில்வ மரம்|வில்வ மரத்தினடியில்]] தியானத்தில் அமர்ந்தார். அம்மரத்தின் மேல் ஒரு [[குரங்கு]] உட்கார்ந்திருந்தது. விதூமன் என்னும் கந்தருவன் எடுத்த மறுபிறவியே இக்குரங்கு என்பர். இவன் திலீபன் மகனென்றும், மாந்ததாவின் மகனென்றும் நூல்கள் கூறுகின்றன.அது மரத்தில் உள்ள வில்வ [[இலை]]களை பறித்து வாயிலிட்டு கடித்துக் கீழே துப்பியது. அவ்விதம் விழுந்த வில்வ இலைகள் [[தியானம்|தியானத்தில்]] இருந்த ஈசன் மீது பட்டு அவரை மறைத்து சிறு[[குன்று]] போல் ஆனது. தியானம் கலைந்து [[கண்]]களை திறந்து பார்த்தார் ஈசன். தன் மேனி முழுவதும் அர்ச்சனை செய்யப்பட்டதுபோல், வில்வ இலைகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து பல பல அருட்தொண்டுகள், தர்மகாரியங்கள் செய்து பரகதி அடைவாய், என அருளினார். இந்த [[மிருகம்|மிருகப்]] பிறவியில் என்னை அறியாமல் [[மனிதர்|மனிதப்பிறவி]] அர்ச்சித்தேன். ஆனால் மனிதப்பிறவி அப்படி அல்ல. மனிதன் வஞ்சகன். சூது நிறைந்தவன், பொறாமை குணம் கொண்டவன். பகுத்தறிவு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆன்மிக உணர்வுகளை வெட்டி விலக்குபவன். நான் மனிதனாக, மன்னனாகப் பிறந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்க அருள் செய்ய வேண்டும். அது எனக்கு இந்தப் பிறவியை நினைவூட்டவும், [[இறை]]பக்தியுடன் நல்லுணர்வுகளோடு இருக்கவும் உதவிசெய்யும், என்றது. ஈசனும் அப்படியே அருள்புரிந்தார். மறுபிறவியில் குரங்கு [[முகம்|முகமும்]], மனித [[உடல்|உடலும்]] கொண்டு, சூரிய குலத்தில் பிறந்தது. [[திருவாரூர்|திருவாரூரை]] ஆட்சி புரிந்தது.
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/முசுகுந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது