வைக்கம் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
இப்போராட்டச் செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் முக்கியச் செய்தியாக வெளியானது. எனவே இந்தப் போராட்டம் குறித்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. இதன் பிறகு காங்கிரசு இயக்கத் தலைவர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்லத் தொடங்கினர். [[இராஜாஜி|இராஜகோபாலாச்சாரி]], டாக்டர் வரதராஜூலு நாயுடு, அய்யாமுத்துக் கவுண்டர், சுவாமி சர்தானந்தி, எம். பெருமாள் நாயுடு ஆகியோர் கேரளாவிற்குச் சென்றனர்.
 
கேரள மாநிலத்திற்குச் சென்ற காங்கிரசு பேரியக்கத் தலைவர்களில் ஈ. வே.ரா ராமசாமி நாயக்கர்பெரியாரின் பேச்சு கேரள மக்களை அதிகமாகக் கவர்ந்தது. இதனால் அங்கிருந்த காவல்துறையினரால் ஈ. வே.ரா ராமசாமி நாயக்கர்பெரியார் [[1924]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 22]] அன்று கைது செய்யப்பட்டார். அப்போதைய அரசர் உத்தரவின்படி ஒரு மாத கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. இதன்படி அவர் அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.
 
தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ. வே.ரா ராமசாமி நாயக்கர்பெரியார் விடுதலையானார். விடுதலையான ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆறு மாத காலம் தண்டனை அளிக்கப்பட்டு திருவாங்கூர் மத்தியச் சிறையில் கடினக் காவல் கைதியாகவும் வைக்கப்பட்டார். இந்த தண்டனைக் காலத்தில் நான்கு மாத காலத்தில் அரசர் இறந்து போனார். இதனால் அரச விளம்பரத்தின் அடிப்படையில் ஈ. வே.ரா ராமசாமி நாயக்கர்பெரியார் விடுவிக்கப்பட்டார். விடுதலையான ஈ. வே.ரா ராமசாமி நாயக்கர்பெரியார் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்குத் திரும்பி விட்டார்.
 
காங்கிரசு பேரியக்கத்தின் இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டும் பிரச்சனை முடிவடையாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காங்கிரசு பேரியக்கத்திற்கு இந்த அறவழிப் போராட்டம் ஒரு சவாலான போராட்டமாகவே நடந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மகாத்மா காந்தி [[1925]] ஆம் ஆண்டு [[மார்ச் 9]] அன்று வைக்கம் போராட்டத்திற்குச் சென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/வைக்கம்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது