சாளுவ நரசிம்ம தேவ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
 
'''சாளுவ நரசிம்ம தேவ ராயன்''' (கி.பி. 1485–1491) [[தென்னிந்தியா]]வின் விஜயநகரப் பேரரசை ஆண்டவன். [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட சாளுவ மரபின் முதல் அரசனும் இவனே.
 
வரி 6 ⟶ 7:
 
==பேரரசனான சூழ்நிலை==
பேரரசன் இரண்டாம் விருபக்ஷ ராயனின் இறப்புக்குப் பின்னர் [[புருத தேவபிரௌத ராயன்]] விஜய நகரத்தின் ஆட்சிக்கு வந்தான். இவன் காலத்தில் பேரரசு பெருங் குழப்பங்களுக்கு உள்ளானது. உள்நாட்டுச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, [[|பாமினி சுல்தானகம்|பஹமானி சுல்தான்]]களின் நெருக்குதல்கள் ஒரு புறமும், போத்துக்கேயரின் நடவடிக்கைகள் ஒருபுறமுமாக விஜயநகரப் பேரரசு ஆபத்துக்களை எதிர் நோக்கியது. புதிய பேரரசன் புருத தேவ ராயன் இவற்றைச் சமாளிக்கக்கூடிய திறமை பெற்றவனாக இருக்கவில்லை. இந் நிலையில், சந்திரகிரி ஆளுநராக இருந்த சாளுவ நரசிம்ம ராயன், தனக்கு விசுவாசமாக இருந்த [[துளுவ நரச நாயக்கன்]] என்பவனை விஜயநகரத்துக்கு அனுப்பினான். விஜய நகரத்துள் புகுந்த நரச நாயக்கன் புருத தேவ ராயனை ஆட்சியிலிருந்து அகற்றினான். இதனைத் தொடர்ந்து சாலுவ நரசிம்மனின் ஆட்சி விஜயநகரத்தில் தொடங்கியது. <ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom 2.38]</ref>
 
==வெற்றி, தோல்விகள்==
பேரரசனாக ஆட்சியைத் தொடங்கிய சாளுவ நரசிம்மன், பேரரசுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைச் சமாளித்தது மட்டுமன்றி அதன் [[எல்லை]]களைஎல்லைகளை விரிவாக்குவதிலும் ஈடுபட்டான். எனினும், பல்வேறு பகுதித் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டவண்ணம் இருந்தன. 1491 அளவில் இவன் [[உதயகிரி]]யை [[கஜபதி கபிலேந்திராபேரரசு|கஜபதி பேரரசர்]]விடம் கபிலேந்திராவிடம் இழந்தான். [[மைசூர்]] பகுதியைச் சேர்ந்த [[உம்மாத்தூர்]] தலைவர்கள், [[ஹடவல்லி]]யைச் சேர்ந்த சாளுவர்கள், [[கர்காலா]]வின் சந்தாராக்கள், [[ஸ்ரீரங்கப்பட்டினம்]], [[குடப்பா]]வின் பேரணிப்பாட்டைச் சேர்ந்த சம்பேதர்கள் என்பவர்களிடமிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
 
1489 இல் உதயகிரி தொடர்பாக கஜபதியுடன் நிகழ்ந்த போர் சாளுவ நரசிம்மனுக்குப் பெரும் சீரழிவாக முடிந்தது. அப்போரில் இவன் பிடிபட்டு, உதயகிரிக் கோட்டையையும், சூழவுள்ள இடங்களையும் விட்டுக்கொடுத்த பின்னர் விடுவிக்கப்பட்டான். எனினும், கர்நாடகத்தின் மங்களூர் நாட்டின் மேற்குத் துறைமுகங்களான, பாத்கல், ஹொன்னாவர், பாக்கனூர் ஆகிவற்றைக் கைப்பற்றுவதில் இவன் வெற்றி பெற்றான். இவ்வெற்றிகள், அராபிய வணிகர்களிடம் இருந்து படைகளுக்கு வேண்டிய குதிரைகளைப் பெறுவதில் பெரிதும் உதவியது.
வரி 15 ⟶ 16:
==இறப்பு==
இவன் 1491 ஆம் ஆண்டில் காலமானான். இவனைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இவனது மகனான [[திம்ம பூபாலன்]] அவ்வாண்டிலேயே கொல்லப்பட்டான். இன்னொரு மகன் சிறுவனாக இருந்தான். அரச குடும்பத்துக்கு விசுவாசமானவனாக இருந்த துளுவ நரச நாயக்கன், அவனை நரசிம்ம ராயன் என்ற பெயரில் முடிசூட்டுவித்து, அவன் சார்பில் தானே நாட்டின் ஆட்சியைக் கவனித்து வந்தான்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/சாளுவ_நரசிம்ம_தேவ_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது