இரண்டாம் நரசிம்ம ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1505 இறப்புகள்
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
 
'''இரண்டாம் நரசிம்ம ராயன்''' [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] [[சாளுவ மரபு|சாளுவ மரபின்]] முதல் அரசனான [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்|சாளுவ நரசிம்ம தேவ ராயனின்]] இரண்டாவது மகனாவான். தந்தைக்குப் பின் அரியணை ஏறிய இவனது தமையனான திம்ம பூபாலன் குறுகிய காலத்திலேயே கொலையுண்டதைத் தொடர்ந்து வயதில் இளையவனாய் இருந்த இவனுக்கு முடி சூட்டப்பட்டது. எனினும், இவனது தந்தையான சாளுவ நரசிம்ம ராயனின் கீழ் விசுவாசமான தளபதியாக இருந்த [[துளுவ நரச நாயக்கன்]] இவன் சார்பில் ஆட்சியை நடத்திவந்தான்.
 
இரண்டாம் நரசிம்ம ராயன் உண்மையில் காவலில் வைக்கப்பட்டு இருந்ததாகவே கருதப்படுகிறது. 1503 ஆம் ஆண்டில் துளுவ நரச நாயக்கன் தனது பொறுப்புக்களைத் தனது மகனான [[வீரநரசிம்ம ராயன்|வீரநரசிம்ம ராயனிடம்]] ஒப்படைத்தான். இவனும் ஒரு பேரரசன் போலவே நிர்வாகத்தை நடத்திவந்தான். 1505 ஆம் ஆண்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த பெனுகொண்டா என்னுமிடத்தில் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து வீரநரசிம்ம ராயன் தானே விஜயநகரப் பேரரசின் அரசனாக முடிசூடிக் கொண்டான்.<ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.38- ]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
[[பகுப்பு:1505 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_நரசிம்ம_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது